Tuesday, September 30, 2014
திருப்பூர் : ஆயுத பூஜை முடிந்ததும், தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க, திருப்பூர் பின்னலாடை துறையினர் ஆயத்தமாகி வருகின்றனர்.
திருப்பூரில் உள்நாட்டு, ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், "நிட்டிங்', "டையிங்', "காம்பாக்டிங்', "பிரின்டிங்' என பல்வேறு வகையான "ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் உள்ளன. மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி என வெளிமாவட்டங்கள்; மகாராஷ்டிரா, குஜராத் போன்ற வெளிமாநிலத்தவர்கள், மெஷின் ஆப்ரேட்டர், செக்கிங், அயர்னிங், ஹெல்ப்பர் போன்ற பலவகையான பணிகளில், ஷிப்ட், ஒப்பந்த அடிப்படைகளில் பணிபுரிகின்றனர்.
தொழிலாளர்களுக்கு பணி அடிப்படையில், ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. போனஸ் பெற்றுக்கொண்டு, குடும்பத்துக்கு தேவையான பண்டிகை கால பொருட்களை வாங்கியும், சொந்த ஊர்களுக்கு சென்றும் பண்டிகையை கொண்டாடுகின்றனர், தொழிலாளர்கள். கடந்த சில ஆண்டுகளாக தொழில் துறையை துரத்திய பிரச்னைகளால், பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. இதனால், தொழிலாளர்களுக்கு வழங்கும் போனஸ் சதவீதமும், உயராமல் இருந்தது.தற்போது, பிரச்னைகள் நீங்கி, தொழில் துறை வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது. வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான ஆர்டர்கள் வரத்துவங்கியுள்ளன. உள்நாட்டு பின்னலாடை நிறுவனங்கள் வசம் பண்டிகை கால ஆர்டர்களும், ஏற்றுமதி நிறுவனங்கள் வசம் குளிர்கால ஆடை உற்பத்திக்கான ஆர்டர்களும் உள்ளன. தீபாவளி நெருங்குவதால், பின்னலாடை நிறுவனங்களில் ஆடை உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது.
ஆர்டர்களை குறித்த நேரத்துக்குள் அனுப்புவதில், அக்கறை காட்டி வரும் தொழில் துறையினர், பண்டிகை நெருங்குவதால் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க தயாராகி வருகின்றனர். விஜயதசமி, ஆயுத பூஜையை தொடர்ந்து, வரும் 3ம் தேதி முதல் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்துள்ளனர். தொழில் நிலை சீராகியுள்ளதால், கடந்த ஆண்டை விட கூடுதல் போனஸ் வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. தொழிலாளர்களை தக்க வைத்துக்கொள்ளும் வகையில், பின்னலாடை துறையினரும், கூடுதல் போனஸ் வழங்க ஆலோசித்து வருகின்றனர்.
"டீமா' தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், ""ஆயுத பூஜை முதல், தொழிலாளர்களுக்கு படிப்படியாக போனஸ் பட்டுவாடா செய்ய, நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன. தொழில் நிலை சீராகியுள்ளதால், கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு 2 முதல் 5 சதவீதம் வரை கூடுதல் போனஸ் வழங்கப்படும்,'' என்றார்
திருப்பூரில் உள்நாட்டு, ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், "நிட்டிங்', "டையிங்', "காம்பாக்டிங்', "பிரின்டிங்' என பல்வேறு வகையான "ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் உள்ளன. மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி என வெளிமாவட்டங்கள்; மகாராஷ்டிரா, குஜராத் போன்ற வெளிமாநிலத்தவர்கள், மெஷின் ஆப்ரேட்டர், செக்கிங், அயர்னிங், ஹெல்ப்பர் போன்ற பலவகையான பணிகளில், ஷிப்ட், ஒப்பந்த அடிப்படைகளில் பணிபுரிகின்றனர்.
தொழிலாளர்களுக்கு பணி அடிப்படையில், ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது. போனஸ் பெற்றுக்கொண்டு, குடும்பத்துக்கு தேவையான பண்டிகை கால பொருட்களை வாங்கியும், சொந்த ஊர்களுக்கு சென்றும் பண்டிகையை கொண்டாடுகின்றனர், தொழிலாளர்கள். கடந்த சில ஆண்டுகளாக தொழில் துறையை துரத்திய பிரச்னைகளால், பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. இதனால், தொழிலாளர்களுக்கு வழங்கும் போனஸ் சதவீதமும், உயராமல் இருந்தது.தற்போது, பிரச்னைகள் நீங்கி, தொழில் துறை வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது. வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான ஆர்டர்கள் வரத்துவங்கியுள்ளன. உள்நாட்டு பின்னலாடை நிறுவனங்கள் வசம் பண்டிகை கால ஆர்டர்களும், ஏற்றுமதி நிறுவனங்கள் வசம் குளிர்கால ஆடை உற்பத்திக்கான ஆர்டர்களும் உள்ளன. தீபாவளி நெருங்குவதால், பின்னலாடை நிறுவனங்களில் ஆடை உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது.
ஆர்டர்களை குறித்த நேரத்துக்குள் அனுப்புவதில், அக்கறை காட்டி வரும் தொழில் துறையினர், பண்டிகை நெருங்குவதால் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க தயாராகி வருகின்றனர். விஜயதசமி, ஆயுத பூஜையை தொடர்ந்து, வரும் 3ம் தேதி முதல் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்துள்ளனர். தொழில் நிலை சீராகியுள்ளதால், கடந்த ஆண்டை விட கூடுதல் போனஸ் வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. தொழிலாளர்களை தக்க வைத்துக்கொள்ளும் வகையில், பின்னலாடை துறையினரும், கூடுதல் போனஸ் வழங்க ஆலோசித்து வருகின்றனர்.
"டீமா' தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், ""ஆயுத பூஜை முதல், தொழிலாளர்களுக்கு படிப்படியாக போனஸ் பட்டுவாடா செய்ய, நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன. தொழில் நிலை சீராகியுள்ளதால், கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு 2 முதல் 5 சதவீதம் வரை கூடுதல் போனஸ் வழங்கப்படும்,'' என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...

0 comments:
Post a Comment