Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
சொத்து குவிப்பு வழக்கில், ஜெ.,வுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்ய வலியுறுத்தி, அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில், அ.தி.மு.க.,வினர் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். காலை 11.45 மணியளவில், கைகாட்டிப்புதூரை சேர்ந்த ஜெய ராஜ், 65 என்ற தொண்டர், பெட்ரோலை உடலில் ஊற்றிக் கொண்டு, "அம்மா வாழ்க,' என கோஷமிட்டவாறு, தீக்குச்சியை உரச முயன் றார். அதை பார்த்து அலறியடித்த கட்சி நிர்வாகிகள், ஓடிச்சென்று, தீப்பெட்டியை பறித்தனர். டீக்கடையில் இருந்து தண்ணீர் வாங்கி, அவர் மீது ஊற்றினர். இச்சம்பவத்தால் உண்ணாவிரத பந்தல் மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

0 comments: