Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரை சேர்ந்தவர் சண்முகம், 50, உடல் நலம் பாதிக்கப்பட்டவர். மனைவி அகிலாண்டேஸ்வரி, 45, தனியார் பள்ளியில் பணியாற்றுகிறார். இவர்களது மகன் கார்த்திகேயன், 20, கோவையில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கார்த்திகேயன், கல்லூரி செல்லும் நேரம்போக, மாலையில் அங்குள்ள மெடிக்கல் ஸ்டோரில் பணியாற்றினார். குடும்ப சூழ்நிலையை நினைத்து வருந்தி வந்துள்ளார். கடந்த 25ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய கார்த்திகேயன், வீடு திரும்பவில்லை. காஞ்சி கோவில் அருகே உள்ள வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. குன்னத்துர் போலீசார், உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்

0 comments: