Tuesday, September 30, 2014
திருப்பூர் : புதிதாக சேர்க்கப்படும் வாக்காளர்களுக்கு, வண்ண அடையாள அட்டை வழங்குவதற்கான இயந்திரங்கள், திருப்பூர் மாவட்டத்துக்கு வந்துள்ளன.
அனைத்து வாக்காளர்களுக்கும், புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இப்பணிக்காக, தமிழகம் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.மாவட்ட அளவில் ஒரு இடத்தில், கம்ப்யூட்டர், பிரின்டர் உள்ளிட்ட இயந்திரங்களுடன், வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கும் மையம் அமைக்கப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்துக்கு இதற்கான 'பிரின்டர்' தருவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: வரும் அக்., மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, நவ., 30 வரை, 18 வயது பூர்த்தியான வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், பெயர் திருத்தம் என சுருக்க முறை திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும். 2015 ஜனவரியில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.சுருக்க முறை திருத்தத்தின் மூலம் சேர்க்கப்படும் புதிய வாக்காளர்களுக்கு, வண்ண அடையாள அட்டை வழங்கப்படும். 'ஸ்மார்ட்' கார்டு போன்ற அடையாள அட்டை அச்சிடப்பட்டு, தேசிய வாக்காளர் தினமான, ஜன., 25 முதல் வினியோகிக்கப்படும்.
வண்ண அடையாள அட்டை வழங்குவது குறித்த அறிவிப்பு, அடுத்த மாத இறுதியில் வெளியாகலாம். அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள், தாலுகா அலுவலகம் அல்லது மாநகராட்சி அலுவலகத்தில், 25 ரூபாய் செலுத்தி புதிய அட்டை பெறலாம். அறிவிப்பு வரும் வரை, கருப்பு வெள்ளை அடையாள அட்டை மட்டும் வழங்கப்படும். முறையான அறிவிப்பு வந்த பிறகு, சிறப்பு முகாம் நடத்தி, அனைவருக்கும் வண்ண அட்டை வழங்கப்படும்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்
அனைத்து வாக்காளர்களுக்கும், புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இப்பணிக்காக, தமிழகம் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.மாவட்ட அளவில் ஒரு இடத்தில், கம்ப்யூட்டர், பிரின்டர் உள்ளிட்ட இயந்திரங்களுடன், வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கும் மையம் அமைக்கப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்துக்கு இதற்கான 'பிரின்டர்' தருவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: வரும் அக்., மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, நவ., 30 வரை, 18 வயது பூர்த்தியான வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், பெயர் திருத்தம் என சுருக்க முறை திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும். 2015 ஜனவரியில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.சுருக்க முறை திருத்தத்தின் மூலம் சேர்க்கப்படும் புதிய வாக்காளர்களுக்கு, வண்ண அடையாள அட்டை வழங்கப்படும். 'ஸ்மார்ட்' கார்டு போன்ற அடையாள அட்டை அச்சிடப்பட்டு, தேசிய வாக்காளர் தினமான, ஜன., 25 முதல் வினியோகிக்கப்படும்.
வண்ண அடையாள அட்டை வழங்குவது குறித்த அறிவிப்பு, அடுத்த மாத இறுதியில் வெளியாகலாம். அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள், தாலுகா அலுவலகம் அல்லது மாநகராட்சி அலுவலகத்தில், 25 ரூபாய் செலுத்தி புதிய அட்டை பெறலாம். அறிவிப்பு வரும் வரை, கருப்பு வெள்ளை அடையாள அட்டை மட்டும் வழங்கப்படும். முறையான அறிவிப்பு வந்த பிறகு, சிறப்பு முகாம் நடத்தி, அனைவருக்கும் வண்ண அட்டை வழங்கப்படும்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...

0 comments:
Post a Comment