Wednesday, September 17, 2014
கடந்த ஆண்டு சிரியாவில் கடத்தப்பட்ட பிரிட்டிஷ் உதவிப் பணியாளர் டேவிட்
ஹெய்ன்ஸ் என்பவரின் தலையை வெட்டி எறிந்த வீடியோவை ஐ.எஸ்.ஐ.எஸ்.
வெளியிட்டது.
முன்னதாக இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதாகக் கூறிய
பிரிட்டன் அரசு, இன்று வீடியோ உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.எஸ்.ஐ.எஸ்.-இன் இந்தக் கொடுஞ்செயலை “முற்றுமுழுதான தீமைச் செயல்” என்று சாடியுள்ளார்.
மேலும் “இந்த கொடூரக் கொலையாளிகளை நீதியின் முன் நிறுத்த எங்கள்
அதிகாரத்தினால் இயன்றவை அனைத்தும் செய்யப்படும். இதற்கு எத்தனை நாட்கள்
ஆனாலும் பரவாயில்லை” என்று கூறியுள்ளார்.
தலைத் துண்டிக்கப்பட்ட ஹெய்ன்ஸின் குடும்பத்திற்கு அரசு தன்னால் ஆன
உதவிகளையும் ஆதரவுகளையும் அளிக்கும் என்று பிரிட்டன் வெளியுறவுச் செயலகம்
தெரிவித்துள்ளது.
அமெரிக்க பத்திரிகையாளர்களான ஜேம்ஸ் ஃபோலி மற்றும் ஸ்டீவன் சோல்டாஃப்
ஆகியோரின் தலைகளைத் துண்டித்த ஐ.எஸ்.ஐ.எஸ். இந்த வீடியோவையும் சமீபத்தில்
வெளியிட்டது. மேலும் குர்திஷ் மற்றும் லெபனான் ராணுவ வீரர்கள் தலையைத்
துண்டித்த வீடியோக்களையும், சிரிய ராணுவ வீரர்களைக் கொன்று குவித்த
வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க பத்திரிகையாளர் சோல்டாஃப் தலையைத் துண்டித்த வீடியோவின்
இறுதியில் பிரிட்டன் உதவிப்பணியாளர் ஹெய்ன்சை சிறிது காண்பித்து இவரது
தலையும் துண்டிக்கப்படும் என்று இஸ்லாமிக் ஸ்டேட் காண்பித்தது. ஹெய்ன்ஸ்
தலையைத் துண்டித்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கொடுஞ்செயலை அமெரிக்க அதிபர்
ஒபாமா கடுமையாகக் கண்டித்துள்ளார்.
ஹெய்ன்ஸ் தலையைத் துண்டித்த அதே ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி அமெரிக்காவுடன்
கூட்டுச் சேர்ந்தால் அழிவு இன்னும் அதிகமாகும் என்று எச்சரித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
0 comments:
Post a Comment