Wednesday, September 17, 2014
திருப்பூர் : வெயில் அதிகரித்து வருவதால், மின்பயன்பாடும் அதிகரித்துள்ளது. எனவே, மின் சிக்கனத்தை கட்டாயம் பின்பற்றுமாறு, பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில வாரங்களாக கடும் வெயில் நிலவுகிறது. வீடுகளில் மின் விசிறி, பிரிட்ஜ், ஏ.சி., போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. வழக்கத்தை காட்டிலும், 30 முதல் 40 சதவீதம் வரை, மின்சாரம் கூடுதலாக செலவாகிறது. மின்சிக்னத்தை நுகர்வோர் பின்பற்றினால் மட்டுமே, மின்தடையை தவிர்க்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில், தேவையான எண்ணிக்கையில் மட்டுமே விளக்குகளை எரியவிட வேண்டும். ஜன்னல் மற்றும் கதவுகளை
திறந்து வைப்பதன் மூலம் காற்றோட்டமும், போதிய வெளிச்சமும் கிடைப்பதால், மின்விளக்கு, மின்விசிறி பயன்பாட்டை குறைக்கலாம்.
தெருவிளக்குகளை, இருள்சூழ்ந்த நேரத்தில் எரிய விட்டு, அதிகாலையில் "ஆப்' செய்ய வேண்டும். வெளிச்சமான நேரங்களில், மாலை 6.00 மணிக்கு முன்னதாகவும், காலை 10.00 மணிக்கு பிறகும் பல்வேறு இடங்களில் தெருவிளக்குகள் எரிவதால், மின்சக்தி விரயமாகிறது.ஜவுளிக்கடை, நகை கடை, வீட்டு உபயோக பொருள் விற்பனையகம், டிபார்ட்மென்டல் ஸ்டோர் போன்றவற்றில், அதிக வெளிச்சம் தரும் நூற்றுக்கணக்கான விளக்குகள் நாள் முழுவதும் எரிய விடப்படுகின்றன; இதை தவிர்க்க வேண்டும்.குடும்பத்தோடு வெளியூர் செல்லும் பட்சத்தில், வீட்டில் உள்ள மெயின் "ஸ்விட்ச் பாக்ஸ்' அணைக் கப்பட வேண்டும். அலுவலகம் மற்றும் நிறுவனங்களில், இரவு பணி முடிந்து பூட்டும்போது, மின்விளக்குகளை முழு வதுமாக அணைத்துவிட வேண்டும்.பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சி, விழா நடத்தும் பகுதிகளில், அதிக மின்விளக்கு மற்றும் சீரியல் பல்பு பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். பொதுக்கூட்டங்களில், அதிக எண்ணிக்கையில் ஸ்பீக்கர் கட்டி, நீண்டநேரம் அவற்றை அலற விடுவதால், மின்சக்தி வீணாகிறது.
மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது,"திருப்பூர் மின்பகிர்மான பகுதிகளில் தினசரி மின்பயன்பாடு, 530 மெகாவாட்டில் இருந்து, தற்போது 570 மெகாவாட் வரை அதிகரித்துள்ளது. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது அவசியம். இதனால், மின் கட்டணமும் நுகர்வோருக்கு கணிசமாக குறையும்; மின் தடையையும் தவிர்க்கலாம்,' என்றனர்.
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில வாரங்களாக கடும் வெயில் நிலவுகிறது. வீடுகளில் மின் விசிறி, பிரிட்ஜ், ஏ.சி., போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. வழக்கத்தை காட்டிலும், 30 முதல் 40 சதவீதம் வரை, மின்சாரம் கூடுதலாக செலவாகிறது. மின்சிக்னத்தை நுகர்வோர் பின்பற்றினால் மட்டுமே, மின்தடையை தவிர்க்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில், தேவையான எண்ணிக்கையில் மட்டுமே விளக்குகளை எரியவிட வேண்டும். ஜன்னல் மற்றும் கதவுகளை
திறந்து வைப்பதன் மூலம் காற்றோட்டமும், போதிய வெளிச்சமும் கிடைப்பதால், மின்விளக்கு, மின்விசிறி பயன்பாட்டை குறைக்கலாம்.
தெருவிளக்குகளை, இருள்சூழ்ந்த நேரத்தில் எரிய விட்டு, அதிகாலையில் "ஆப்' செய்ய வேண்டும். வெளிச்சமான நேரங்களில், மாலை 6.00 மணிக்கு முன்னதாகவும், காலை 10.00 மணிக்கு பிறகும் பல்வேறு இடங்களில் தெருவிளக்குகள் எரிவதால், மின்சக்தி விரயமாகிறது.ஜவுளிக்கடை, நகை கடை, வீட்டு உபயோக பொருள் விற்பனையகம், டிபார்ட்மென்டல் ஸ்டோர் போன்றவற்றில், அதிக வெளிச்சம் தரும் நூற்றுக்கணக்கான விளக்குகள் நாள் முழுவதும் எரிய விடப்படுகின்றன; இதை தவிர்க்க வேண்டும்.குடும்பத்தோடு வெளியூர் செல்லும் பட்சத்தில், வீட்டில் உள்ள மெயின் "ஸ்விட்ச் பாக்ஸ்' அணைக் கப்பட வேண்டும். அலுவலகம் மற்றும் நிறுவனங்களில், இரவு பணி முடிந்து பூட்டும்போது, மின்விளக்குகளை முழு வதுமாக அணைத்துவிட வேண்டும்.பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சி, விழா நடத்தும் பகுதிகளில், அதிக மின்விளக்கு மற்றும் சீரியல் பல்பு பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். பொதுக்கூட்டங்களில், அதிக எண்ணிக்கையில் ஸ்பீக்கர் கட்டி, நீண்டநேரம் அவற்றை அலற விடுவதால், மின்சக்தி வீணாகிறது.
மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது,"திருப்பூர் மின்பகிர்மான பகுதிகளில் தினசரி மின்பயன்பாடு, 530 மெகாவாட்டில் இருந்து, தற்போது 570 மெகாவாட் வரை அதிகரித்துள்ளது. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது அவசியம். இதனால், மின் கட்டணமும் நுகர்வோருக்கு கணிசமாக குறையும்; மின் தடையையும் தவிர்க்கலாம்,' என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
0 comments:
Post a Comment