Wednesday, September 17, 2014
திருப்பூர் : வெயில் அதிகரித்து வருவதால், மின்பயன்பாடும் அதிகரித்துள்ளது. எனவே, மின் சிக்கனத்தை கட்டாயம் பின்பற்றுமாறு, பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில வாரங்களாக கடும் வெயில் நிலவுகிறது. வீடுகளில் மின் விசிறி, பிரிட்ஜ், ஏ.சி., போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. வழக்கத்தை காட்டிலும், 30 முதல் 40 சதவீதம் வரை, மின்சாரம் கூடுதலாக செலவாகிறது. மின்சிக்னத்தை நுகர்வோர் பின்பற்றினால் மட்டுமே, மின்தடையை தவிர்க்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில், தேவையான எண்ணிக்கையில் மட்டுமே விளக்குகளை எரியவிட வேண்டும். ஜன்னல் மற்றும் கதவுகளை
திறந்து வைப்பதன் மூலம் காற்றோட்டமும், போதிய வெளிச்சமும் கிடைப்பதால், மின்விளக்கு, மின்விசிறி பயன்பாட்டை குறைக்கலாம்.
தெருவிளக்குகளை, இருள்சூழ்ந்த நேரத்தில் எரிய விட்டு, அதிகாலையில் "ஆப்' செய்ய வேண்டும். வெளிச்சமான நேரங்களில், மாலை 6.00 மணிக்கு முன்னதாகவும், காலை 10.00 மணிக்கு பிறகும் பல்வேறு இடங்களில் தெருவிளக்குகள் எரிவதால், மின்சக்தி விரயமாகிறது.ஜவுளிக்கடை, நகை கடை, வீட்டு உபயோக பொருள் விற்பனையகம், டிபார்ட்மென்டல் ஸ்டோர் போன்றவற்றில், அதிக வெளிச்சம் தரும் நூற்றுக்கணக்கான விளக்குகள் நாள் முழுவதும் எரிய விடப்படுகின்றன; இதை தவிர்க்க வேண்டும்.குடும்பத்தோடு வெளியூர் செல்லும் பட்சத்தில், வீட்டில் உள்ள மெயின் "ஸ்விட்ச் பாக்ஸ்' அணைக் கப்பட வேண்டும். அலுவலகம் மற்றும் நிறுவனங்களில், இரவு பணி முடிந்து பூட்டும்போது, மின்விளக்குகளை முழு வதுமாக அணைத்துவிட வேண்டும்.பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சி, விழா நடத்தும் பகுதிகளில், அதிக மின்விளக்கு மற்றும் சீரியல் பல்பு பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். பொதுக்கூட்டங்களில், அதிக எண்ணிக்கையில் ஸ்பீக்கர் கட்டி, நீண்டநேரம் அவற்றை அலற விடுவதால், மின்சக்தி வீணாகிறது.
மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது,"திருப்பூர் மின்பகிர்மான பகுதிகளில் தினசரி மின்பயன்பாடு, 530 மெகாவாட்டில் இருந்து, தற்போது 570 மெகாவாட் வரை அதிகரித்துள்ளது. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது அவசியம். இதனால், மின் கட்டணமும் நுகர்வோருக்கு கணிசமாக குறையும்; மின் தடையையும் தவிர்க்கலாம்,' என்றனர்.
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில வாரங்களாக கடும் வெயில் நிலவுகிறது. வீடுகளில் மின் விசிறி, பிரிட்ஜ், ஏ.சி., போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. வழக்கத்தை காட்டிலும், 30 முதல் 40 சதவீதம் வரை, மின்சாரம் கூடுதலாக செலவாகிறது. மின்சிக்னத்தை நுகர்வோர் பின்பற்றினால் மட்டுமே, மின்தடையை தவிர்க்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில், தேவையான எண்ணிக்கையில் மட்டுமே விளக்குகளை எரியவிட வேண்டும். ஜன்னல் மற்றும் கதவுகளை
திறந்து வைப்பதன் மூலம் காற்றோட்டமும், போதிய வெளிச்சமும் கிடைப்பதால், மின்விளக்கு, மின்விசிறி பயன்பாட்டை குறைக்கலாம்.
தெருவிளக்குகளை, இருள்சூழ்ந்த நேரத்தில் எரிய விட்டு, அதிகாலையில் "ஆப்' செய்ய வேண்டும். வெளிச்சமான நேரங்களில், மாலை 6.00 மணிக்கு முன்னதாகவும், காலை 10.00 மணிக்கு பிறகும் பல்வேறு இடங்களில் தெருவிளக்குகள் எரிவதால், மின்சக்தி விரயமாகிறது.ஜவுளிக்கடை, நகை கடை, வீட்டு உபயோக பொருள் விற்பனையகம், டிபார்ட்மென்டல் ஸ்டோர் போன்றவற்றில், அதிக வெளிச்சம் தரும் நூற்றுக்கணக்கான விளக்குகள் நாள் முழுவதும் எரிய விடப்படுகின்றன; இதை தவிர்க்க வேண்டும்.குடும்பத்தோடு வெளியூர் செல்லும் பட்சத்தில், வீட்டில் உள்ள மெயின் "ஸ்விட்ச் பாக்ஸ்' அணைக் கப்பட வேண்டும். அலுவலகம் மற்றும் நிறுவனங்களில், இரவு பணி முடிந்து பூட்டும்போது, மின்விளக்குகளை முழு வதுமாக அணைத்துவிட வேண்டும்.பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சி, விழா நடத்தும் பகுதிகளில், அதிக மின்விளக்கு மற்றும் சீரியல் பல்பு பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். பொதுக்கூட்டங்களில், அதிக எண்ணிக்கையில் ஸ்பீக்கர் கட்டி, நீண்டநேரம் அவற்றை அலற விடுவதால், மின்சக்தி வீணாகிறது.
மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது,"திருப்பூர் மின்பகிர்மான பகுதிகளில் தினசரி மின்பயன்பாடு, 530 மெகாவாட்டில் இருந்து, தற்போது 570 மெகாவாட் வரை அதிகரித்துள்ளது. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது அவசியம். இதனால், மின் கட்டணமும் நுகர்வோருக்கு கணிசமாக குறையும்; மின் தடையையும் தவிர்க்கலாம்,' என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment