Wednesday, September 24, 2014
திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்தவர் சதீஸ் என்ற சதீஸ்பாண்டி (வயது 21). எலக்ட்ரீசியன். இவரும் சிவன் தியேட்டர் ரோட்டை சேர்ந்த கார்த்திக் (22), கோபால் (22) ஆகியோரும் நண்பர்கள்.
சம்பவத்தன்று நண்பர்கள் 3 பேரும் அங்குள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தினர். அப்போது கார்த்திக்கும் கோபாலும் நண்பர் சதீசிடம் பணம் கேட்டனர். தன்னிடம் பணம் இல்லை என்று சதீஸ் கூறினார்.
இந்நிலையில் பி.என். ரோடு மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தத்துக்கு 3 பேரும் வந்தனர். தொடர்ந்து பணம் கேட்டு கார்த்திக்கும், கோபாலும் நச்சரித்தனர். தன்னிடம் பணம் ஏதும் இல்லை என்று முடிவாக சதீஸ் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சதீசின் தலையில் வெட்டினர்.
வெட்டுக்காயம் அடைந்த சதீசுக்கு ரத்தம்கொட்டியது. அதிர்ச்சியடைந்த சதீஸ் சத்தம்போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். பொதுமக்கள் ஓடி வருவதை பார்த்த நண்பர்கள் 2 பேரும் ஓட்டம் பிடித்தனர்.
பொதுமக்கள் சதீசை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சதீஸ் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் கார்த்திக்கும், கோபாலும் திருப்பூர் கோர்ட்டில் சரணடைந்தனர். நீதிபதியின் உத்தரவையடுத்த 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது குறித்து சப்–இன்ஸ் பெக்டர் சசிகலா, ஏட்டு செந்தில்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment