Wednesday, September 24, 2014

On Wednesday, September 24, 2014 by farook press in ,    
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

உடுமலை காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம்
​ இடைக்கால இழப்பீட்டுத் தொகை​
 வழங்க
​ வேண்டும். மேலும்
, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க
​ வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வரவேற்புத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு செயலாளர் கே.காமராஜ் புதன்கிழமை (செப்.24) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உடுமலைபேட்டையில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி லீலாவதி என்ற மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஓட்டல் தொழிலாளி சந்திரா என்ற பெண்ணை காவல்துறையினர் சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாக பல நாட்கள் தனியாக அடைத்து வைத்து கொடூரமாக சித்ரவதை செய்த விபரம் சென்னை உயர்நீதிமன்ற விசாரணை மூலம் வெளிவந்தது.
குறிப்பாக அவரை நிர்வாணப்படுத்தியும்பிறப்புறுப்பில் லத்தியால் குத்தியும்தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடித்தும்நகக்கண்களில் ஊசியை குத்தி, விரல்களைச் சிதைத்தும் சித்ரவதை செய்திருப்பதாக அவரது மகள் ராஜகுமாரி நீதிமன்றத்தில் கொடுத்திருக்கும் விபரங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான இந்த செயல், மனித உரிமை மீறல் குற்றம் ஆகும்.
இது குறித்து தமிழக அரசு தவறிழைத்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நியாயம் வழங்க வேண்டும்,​ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் தவறிழைத்த காவலர்களை தமிழக அரசு காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளாமல் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க ஒத்துழைக்க வேண்டும்​ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி​ (மார்க்சிஸ்ட்)​ வலியுறுத்தியிருந்தது. 
மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சந்திரா​ தரப்புக்கு​ ஆதரவாக​
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பிலும் தலையீட்டு
மனு தாக்கல் செய்யப்பட்டது.​ 
சென்னை உயர்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ராமசுப்பிரமணியம் அவர்கள், காவல் துறையின் குற்றத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் பாதிக்கப்பட்ட
​ சந்திராவுக்கு ​
ரூ. 2லட்சம் இடைக்கால
​ ​
இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இத்துடன் இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரிக்கவும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திருப்பூர் மாவட்டக்குழு வரவேற்கிறது. நீதிமன்றத்தின்
​ ​
இந்த உத்தரவை ஏற்று பாதிக்கப்பட்ட சந்திராவுக்கு காலதாமதம் செய்யாமல் உடனடியாக இந்த தொகையை
​ ​
மாநில அரசு வழங்க வேண்டும். சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும்
​ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)​
 திருப்பூர் மாவட்டக்குழு வலியுறுத்துகிறது.
இவ்வாறு கே.காமராஜ் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.
----------------

0 comments: