Wednesday, September 24, 2014
திருப்பூர் காந்திநகர் ராக்கியாபாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 28). டைல்ஸ் மேஸ்திரி. இவருக்கும் திருச்சியை சேர்ந்த சுப்பிரமணியன்– சரோஜா தம்பதியின் மகள் நந்தினிக்கும் (23) கடந்த 6 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. சிந்தனா (5) என்ற பெண் குழந்தை உள்ளார். 
இந்நிலையில் பால கிருஷ்ணனின் நண்பர் ராஜேந்திரன் (28) என்பவரும் கட்டிடவேலைக்கு சென்றார். நண்பர் ராஜேந்திரனை வீட்டுக்கு அடிக்கடி பாலகிருஷ்ணன் அழைத்து வந்தார். இதனால் நந்தினிக்கும் ராஜேந்திரனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.
தனது மனைவி நண்பருடன் சிரித்து பேசுவதை கண்டு பாலகிருஷ்ணன் சந்தேக மடைந்தார். இதனால் நந்தினியை அடித்து துன்புறுத்தினார். இதில் கோபமடைந்த நந்தினி கடந்த 4 மாதத்துக்கு முன் தனது குழந்தையை அழைத்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றார். பெரியோர்கள் சமரசம் செய்துவைத்து நந்தினியை கணவருடன் அனுப்பி வைத்தனர். சிறிது நாட்களே அமைதியாக சென்ற வாழ்க்கையில் மீண்டும் சந்தேகம் கிளம்பியது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
வாழ்க்கையில் வெறுப்படைந்த நந்தினி நேற்று இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதன்படி தூக்கில் தொங்கியபோது வீட்டில் உள்ளவர்கள் பார்த்தனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு நந்தினியை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நந்தினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நந்தினியின் பெற்றோர் திருப்பூர் விரைந்தனர். நந்தினியின் தாய் சரோஜா அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 

 
 
 
0 comments:
Post a Comment