Wednesday, September 24, 2014
கோவை, செப். 24–
கோவையை அடுத்த திருமலையாம் பாளையத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியின் மேலாளராக லட்சுமணன் உள்ளார். நேற்று மாலை வேலை முடிந்து வங்கியை அலுவலர்கள் பூட்டிச் சென்றனர். இந்த நிலையில் இரவு வங்கியின் காம்பவுண்டு சுவரை தாண்டி 2 கொள்ளையர்கள் வங்கிக்குள் நுழைந்தனர்.
அவர்கள் வங்கியின் பின்புறம் உள்ள ஜன்னல் கம்பியை வளைத்து உடைத்தனர். அப்போது ஜன்னலில் இருந்த கண்ணாடி உடைந்து கீழே விழுந்தது. இந்த சத்தம் கேட்டு வங்கியின் இரவு காவலாளி கோபால் வங்கிக்கு பின்புறம் சென்று பார்த்தார்.
காவலாளியை பார்த்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து காவலாளி கோபால் வங்கி மேலாளர் லட்சுமணனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கொள்ளை சம்பவம் குறித்து க.க.சாவடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். வங்கியில் பொருத்தியிருந்த கேமிராவை ஆய்வு செய்து பார்த்த போது அதில் கொள்ளை முயற்சி சம்பவம் பதிவாகியிருந்தது. அதில் இருந்த 2 பேரின் புகைப்படத்தை எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
- 
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
- 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 

 
 
 
0 comments:
Post a Comment