Wednesday, September 24, 2014
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து திருப்பூருக்கு பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை பழனியை சேர்ந்த டிரைவர் தங்கவேல் (வயது 50) ஓட்டி வந்தார்.
காங்கயம் அருகே கொடுவாய் வழியாக பஸ் வந்தபோது கொல்லி வாய்க்கால் பாளையம் என்ற இடத்தில் பஸ்சும், திருப்பூரில் இருந்து தாராபுரம் நோக்கி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதின.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பழனியை சேர்ந்த ராமலட்சுமி (72) என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். லாரி டிரைவர் புதுப்பட்டியை சேர்ந்த காளியப்பன் (42), பஸ் டிரைவர் தங்கவேல் (52) உள்பட 17 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்ததும் அவினாசி பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். மேல் சிகிச்சைக்காக தங்கவேல் உள்பட 4 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களில் 7 பேர் வீடு திரும்பினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment