Sunday, September 14, 2014
திருப்பூரில் பெண் போலீஸ் ஏட்டுவுடன் பார் உரிமையாளர் ஓட்டம் பிடித்தார். தனது கணவரை மீட்டு தரக்கோரி பார் உரிமையாளரின் மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
பெண் போலீஸ் ஏட்டு
திருப்பூர் போலீஸ் லைன் முதல் வீதியில் உள்ள காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் மனோஜ்குமார்(வயது 40). இவர் திருப்பூரில் சொந்தமாக ‘பாலிபேக்’ நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மணிமாலா(37). இவர் கே.வி.ஆர். நகரில் உள்ள மத்திய போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு மேகா(11) என்ற மகளும், சந்தோஷ்குமார்(9) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த மணிமாலா மீது லஞ்சப்புகார் எழுந்ததால், மாநகர போலீஸ் ஆணையர் சேஷசாய் சமீபத்தில் அவரை திருப்பூர் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் தேர்தல் பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக மணிமாலா தேர்தல் பிரிவில் பணியாற்றி வந்தார்.
பெண் போலீஸ் ஏட்டு மாயம்
போலீஸ் ஏட்டு மணிமாலாவுக்கும், திருப்பூர் ஆலங்காடு பகுதியில் பார் நடத்தி வரும் திருப்பூர் ஜீவாநகரை சேர்ந்த சக்திவேல்(41) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சக்திவேலுக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 21 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 11–ந் தேதி காலை மணிமாலா, தனது மொபட், செல்போன்கள் ஆகியவற்றை வீட்டிலேயே போட்டு விட்டு நகை மற்றும் துணிகளை எடுத்துக்கொண்டு, மாயமானார்.
இதுகுறித்து நேற்று முன்தினம் மணிமாலாவின் கணவர் மனோஜ்குமார் ‘‘எனது மனைவியை காணவில்லை. அவர் தனது கள்ளக்காதலனுடன் ஓடியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். காணாமல் போன தனது மனைவியை மீட்டுத்தர வேண்டும்’’ என்று திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமாலாவை தேடி வந்தனர்.
பார் உரிமையாளர் ஓட்டம்
இந்தநிலையில் நேற்று காலை திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்துக்கு வந்த பார் உரிமையாளர் சக்திவேலின் மனைவி ஜெயந்தி, தனது கணவரை கடந்த 11–ந் தேதி காலை முதல் காணவில்லை. அவருடைய ஸ்கூட்டர், கார் மற்றும் செல்போன்கள் வீட்டிலேயே உள்ளன. அவரை கண்டுபிடித்து தரவேண்டும் என்று புகார் செய்தார்.
இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனால் பார் உரிமையாளருடன் பெண் போலீஸ் ஏட்டு மாயமானது உறுதியாகியுள்ளது. மேலும், தங்கள் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதால், இருவரும் தங்கள் செல்போன்கள் மற்றும் வாகனங்களை வீட்டிலேயே விட்டுவிட்டு சென்று இருப்பதால், போலீசாருக்கு துப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் இருவரின் வங்கி கணக்குகளையும் கண்காணிக்க தொடங்கி உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...
.jpg)
0 comments:
Post a Comment