Tuesday, September 30, 2014
உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்,
திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம்
திருப்பூர்
அன்புடையீர், வணக்கம்.
பொருள்: பண்டிகை கால சிறப்புப் பேருந்துகளைஇயக்குதல் – உரிய கட்டணம் வசூலிப்பதை உத்தரவாதப்படுத்த –கோருதல் – தொடர்பாக
தீபாவளி, ஆயுதபூஜை போன்ற பண்டிகைகளின் போது திருப்பூர் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான வெளிமாவட்டங்களைச் சார்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று வர வேண்டியுள்ளதால், சிறப்பு பேருந்துகள் இயக்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் இதிலும் சாதாரண பேருந்து கட்டணங்களை வசூலிப்பதை உறுதி செய்ய வேண்டும். பல்வேறு தனியார் ஆம்னி பேருந்துகள் கூடுதலான முறையில் கட்டணக் கொள்ளையடிக்காமல் உரிய முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
இதுதவிர திருப்பூரிலிருந்து கோவை செல்ல அவிநாசி,பல்லடம் வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில்அவிநாசி வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் அவிநாசிக்குச் செல்லும் பயணிகளை பெரும்பாலும் ஏற்றுவதில்லை. லாப நோக்கோடு, கோவை செல்லும் பயணிகளை மட்டும் ஏற்றிக்கொண்டு, இதர பயணிகளை வயதானவர்களாக இருந்தாலும்கூடஇடையிலேயே நிறுத்தி இறக்கி விட்டு செல்லும் அவலமும் நடைபெறுகிறது.
எனவே இது போன்ற செயல்களையும் தடுத்து நிறுத்தி பொதுப் பயன்பாட்டிற்கான சேவைப்பிரிவில் இயங்கும் போக்குவரத்தை, லாப நோக்கோடு மட்டும் பார்க்கும் தனியார் பேருந்து நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஒழுங்குப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
மேற்கண்ட மக்கள் நலன் சார்ந்த இந்த பிரச்சனைகளின் மீது தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து உதவிடுமாறு இந்தியகம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) திருப்பூர் மாவட்டக்குழு சார்பில்கேட்டுக் கொள்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment