Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
திருவிதாங்கோட்டில் மாவட்ட முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு அலுவலக கட்டிட திறப்பு விழா நடந்தது. கட்டிடத்தை தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் தமிழ்மகன் உசேன் திறந்து வைத்தார். விழாவுக்கு மாவட்ட முஸ்லிம் ஜமா­த் கூட்டமைப்பு கட்டிட கமிட்டி கன்வீனர் அப்துல் லத்தீப் தலைமை தாங்கினார். தேங்காப்பட்டணம் காதர், திருவிதாங்கோடு முஹம்மது ஹனீபா, குளச்சல் அப்துல் ரகுமான், திட்டுவிளை ரஷீதலி, தக்கலை அப்துல்கபூர், களியக்காவிளை நாசர், மேக்காமண்டபம் ஜலாலுதீன், மணவாளக்குறிச்சி பஷீர், மாதவலாயம் பீர்முகம்மது, மேக்காமண்டபம் ஜாகீர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத் இமாம் எப்.ஷாஹீல் ஹமீது அன்வரி, கிறாஅத் ஓதினார். அலுவலக மேல் தளத்தை கூட்டமைப்பு கல்வி கமிட்டி ஒருங்கிணைப்பாளர் ஷாஜகான் திறந்துவைத்துப் பேசினார். முஸ்லிம் ஜமா­த் கூட்டமைப்பு பொது செயலாளர் எம்.ஏ.கான் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் தமிழ் மகன் உசேன் ஏற்புரையாற்றினார். காயல்பட்டினம் மஹ்ளரா அரபிக் கல்லூரி பேராசிரியர் அஸ்செய்யித் அப்துர்ரஹ்மான் பாளில் அஹ்சனி தங்கள், மாவட்ட ஜமாத் உலமா பேரவைத் தலைவர் அபூசாலிஹ் ஆலிம், நாகர்கோவில் கலாசார கழக இமாம் ஷவ்கத் அலி ஆலிம் உஸ்மானி, நிலாமுதீன், குளச்சல் நகர்மன்றத் தலைவர்  நசீர், ஜகபர்சாதிக், பாவலர் சித்திக், பெட் டிரஸ்ட் தாளாளர் எஸ்.எம்.எஸ்.ஹாமீது, எம்.இ.டி. பொறியியல் கல்லூரித் தலைவர் முகம்மது எக்கிம், முன்னாள் காவல் துறை கண்காணிப்பாளர் அப்துல்லா இஸ்மத் ஆகியோர் பேசினர்.  திருவிதாங்கோடு அஞ்சுவன்னம் முஸ்லிம் ஜமாத் தலைவர் நசீர் நன்றி கூறினார்.

0 comments: