Friday, September 05, 2014
வெள்ளமடம் அருகே உள்ள ஆண்டார்குளத்தில் நாயை விழுங்கிய மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.
வெள்ளமடம் அருகே உள்ள ஆண்டார்குளம் அம்மன் கோவில் அருகில் உள்ள குளத்தையொட்டி வசிப்பவர் செல்லத்துரை (வயது 55). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். மேலும், வீட்டில் ஒரு குட்டி நாய் ஒன்றை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்புறம் அந்த நாய் குரைத்து கொண்டே இருந்தது. சிறிது நேரம் கழித்து நாய் குரைக்கும் சத்தம் கேட்கவில்லை. உடனே செல்லத்துரையின் மருமகள் தீபா பின்னால் சென்று பார்த்த போது அந்த நாயை ஒரு மலைப்பாம்பு ஒன்று சுருட்டி விழுங்கி கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தீபா உடனே அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.
பொதுமக்கள் வந்த சத்தத்தை கேட்டதும் மலைப்பாம்பு நாயை கக்கிவிட்டு அங்கிருந்து செல்ல முயற்சி செய்தது. உடனே, மீன் பிடிக்கும் ஒரு கருவியான ஊத்தாலைக் கொண்டு மலைப்பாம்பை பிடித்து வைத்தனர். பின்னர் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே, பூதப்பாண்டி வனசரக அலுவலர் ஸ்ரீ வில்சன் உத்தரவின் பேரில் வனகாப்பாளர் கிருஷ்ணன்குட்டி, தோட்டக்காவலர் தங்கப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை பிடித்து சாக்கு பையில் போட்டு ஆரல்வாய்மொழி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து அந்த மலைப்பாம்பு பொய்கை காட்டுப்பகுதியில் கொண்டுவிடப்பட்டது. பிடிபட்ட இந்த மலைப்பாம்பு சுமார் 10 அடி நீளமும், 70 கிலோ எடையும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
வெள்ளமடம் அருகே உள்ள ஆண்டார்குளம் அம்மன் கோவில் அருகில் உள்ள குளத்தையொட்டி வசிப்பவர் செல்லத்துரை (வயது 55). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். மேலும், வீட்டில் ஒரு குட்டி நாய் ஒன்றை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்புறம் அந்த நாய் குரைத்து கொண்டே இருந்தது. சிறிது நேரம் கழித்து நாய் குரைக்கும் சத்தம் கேட்கவில்லை. உடனே செல்லத்துரையின் மருமகள் தீபா பின்னால் சென்று பார்த்த போது அந்த நாயை ஒரு மலைப்பாம்பு ஒன்று சுருட்டி விழுங்கி கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தீபா உடனே அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.
பொதுமக்கள் வந்த சத்தத்தை கேட்டதும் மலைப்பாம்பு நாயை கக்கிவிட்டு அங்கிருந்து செல்ல முயற்சி செய்தது. உடனே, மீன் பிடிக்கும் ஒரு கருவியான ஊத்தாலைக் கொண்டு மலைப்பாம்பை பிடித்து வைத்தனர். பின்னர் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே, பூதப்பாண்டி வனசரக அலுவலர் ஸ்ரீ வில்சன் உத்தரவின் பேரில் வனகாப்பாளர் கிருஷ்ணன்குட்டி, தோட்டக்காவலர் தங்கப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை பிடித்து சாக்கு பையில் போட்டு ஆரல்வாய்மொழி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து அந்த மலைப்பாம்பு பொய்கை காட்டுப்பகுதியில் கொண்டுவிடப்பட்டது. பிடிபட்ட இந்த மலைப்பாம்பு சுமார் 10 அடி நீளமும், 70 கிலோ எடையும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...

0 comments:
Post a Comment