Tuesday, September 02, 2014
தாராபுரம், : பட்டா கேட்டு தாராபுரம் நகர நிலவரி திட்ட அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் தனி வட்டாட்சியர் நகர நிலவரித் திட்டம் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 வார்டுகளில் உள்ள வீட்டு மனைகளுக்கு தற்காலிக பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது 30 வார்டுகளில் இரண்டு மாதத்திற்கு இரண்டு வார்டுகள் வீதம் அனைத்து குடியிருப்புகளுக்கும் இது சம்பந்தமாக நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நகரத்திற்கு உட்பட்ட 2வது வார்டு, சித்தராவுத்தன்பாளையம், காட்டூர் பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 75க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அரசு நிலத்தில் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் பட்டா கேட்டு பல முறை விண்ணப்பித்தும் பட்டா வழங்கப்படவில்லை.
தற்போது அறிவிப்புகள் வெளியான போதும், போதுமான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் இவர்களுக்கு பட்டா வழங்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் நேற்று நகர நிலவரித் திட்ட அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். இதையடுத்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய ஆவணங்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment