Tuesday, September 09, 2014
அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே செவிலியர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் 4,500 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், பணி மூப்பு அடிப்படையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் லீலாவதி தலைமை தாங்கினார். தலைவர் அறிவுக்கண் மற்றும் பொருளாளர் கனகலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சென்னை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கல்பட்டு, மதுரை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 400 செவிலியர்கள் கலந்துகொண்டனர். செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு மருத்துவமனைகளில் சுகாதார சேவைகளில் பாதிப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து அரசு செவிலியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறும்போது, நாங்கள் எங்களுடைய கோரிக்கைகளை பல்வேறு ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். முதல்-அமைச்சர் ஜெயலலிதா எங்கள் கோரிக்கையை நிறைவேற்றித்தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் வருகிற 15-ந் தேதி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 5 ஆயிரம் செவிலியர்கள் தற்காலிக விடுப்பு எடுத்துவிட்டு கோட்டை நோக்கி பேரணியாக சென்று முதல்-அமைச்சரிடம் மனு கொடுப்பதற்கு முடிவெடுத்துள்ளோம் என்றனர்.
அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் 4,500 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், பணி மூப்பு அடிப்படையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் லீலாவதி தலைமை தாங்கினார். தலைவர் அறிவுக்கண் மற்றும் பொருளாளர் கனகலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சென்னை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கல்பட்டு, மதுரை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 400 செவிலியர்கள் கலந்துகொண்டனர். செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு மருத்துவமனைகளில் சுகாதார சேவைகளில் பாதிப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து அரசு செவிலியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறும்போது, நாங்கள் எங்களுடைய கோரிக்கைகளை பல்வேறு ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். முதல்-அமைச்சர் ஜெயலலிதா எங்கள் கோரிக்கையை நிறைவேற்றித்தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் வருகிற 15-ந் தேதி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 5 ஆயிரம் செவிலியர்கள் தற்காலிக விடுப்பு எடுத்துவிட்டு கோட்டை நோக்கி பேரணியாக சென்று முதல்-அமைச்சரிடம் மனு கொடுப்பதற்கு முடிவெடுத்துள்ளோம் என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...

0 comments:
Post a Comment