Tuesday, September 09, 2014
அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே செவிலியர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் 4,500 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், பணி மூப்பு அடிப்படையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் லீலாவதி தலைமை தாங்கினார். தலைவர் அறிவுக்கண் மற்றும் பொருளாளர் கனகலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சென்னை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கல்பட்டு, மதுரை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 400 செவிலியர்கள் கலந்துகொண்டனர். செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு மருத்துவமனைகளில் சுகாதார சேவைகளில் பாதிப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து அரசு செவிலியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறும்போது, நாங்கள் எங்களுடைய கோரிக்கைகளை பல்வேறு ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். முதல்-அமைச்சர் ஜெயலலிதா எங்கள் கோரிக்கையை நிறைவேற்றித்தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் வருகிற 15-ந் தேதி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 5 ஆயிரம் செவிலியர்கள் தற்காலிக விடுப்பு எடுத்துவிட்டு கோட்டை நோக்கி பேரணியாக சென்று முதல்-அமைச்சரிடம் மனு கொடுப்பதற்கு முடிவெடுத்துள்ளோம் என்றனர்.
அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் 4,500 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், பணி மூப்பு அடிப்படையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் லீலாவதி தலைமை தாங்கினார். தலைவர் அறிவுக்கண் மற்றும் பொருளாளர் கனகலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் கோஷம் எழுப்பினார்கள்.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சென்னை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கல்பட்டு, மதுரை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் 400 செவிலியர்கள் கலந்துகொண்டனர். செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு மருத்துவமனைகளில் சுகாதார சேவைகளில் பாதிப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து அரசு செவிலியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறும்போது, நாங்கள் எங்களுடைய கோரிக்கைகளை பல்வேறு ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். முதல்-அமைச்சர் ஜெயலலிதா எங்கள் கோரிக்கையை நிறைவேற்றித்தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் வருகிற 15-ந் தேதி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 5 ஆயிரம் செவிலியர்கள் தற்காலிக விடுப்பு எடுத்துவிட்டு கோட்டை நோக்கி பேரணியாக சென்று முதல்-அமைச்சரிடம் மனு கொடுப்பதற்கு முடிவெடுத்துள்ளோம் என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...

0 comments:
Post a Comment