Sunday, September 14, 2014
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜுக்கு அவர் வெள்ளிக்கிழமை அனுப்பிய கடிதம்:
உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம் பகுதிகளில் போதிய அளவில் பருவமழை பெய்யாத காரணத்தால் வறட்சி நிலவுகிறது. பாசனத்திற்கு மட்டுமின்றி, குடிநீருக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட பகுதிகளில் தண்ணீர் பிரச்னையை போக்கும் வகையில் அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்.
அமராவதி ஆற்றில், திருப்பூர் மாவட்ட பகுதியில் 60-க்கு மேற்பட்ட கிணறுகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் மேற்கண்ட பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆற்றோரப் பகுதி விவசாயிகளும் பாசனத்திற்கு ஆற்றுநீரை பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் தேவையான குடிநீர் கிடைக்கவும், பாசனத்திற்காகவும் அமராவதி அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட வேண்டும்.
90 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்பொழுது 80 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. வறட்சி நிலவும் இச்சூழ்நிலையில் அமராவதி அணையின் தண்ணீரை உடனடியாக திறந்துவிட்டு ஆற்றின் கடைக்கோடி பகுதிக்கும் சென்றடையும் வகையில் நீர்மேலாண்மை செய்வதற்கு ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் திருப்பூர் மாவட்ட திமுக சார்பில் அமராவதி ஆற்றுநீரை நம்பியுள்ள பொதுமக்கள், கால்நடை வளர்ப்போர், விவசாயிகளைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment