Sunday, September 14, 2014
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜுக்கு அவர் வெள்ளிக்கிழமை அனுப்பிய கடிதம்:
உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம் பகுதிகளில் போதிய அளவில் பருவமழை பெய்யாத காரணத்தால் வறட்சி நிலவுகிறது. பாசனத்திற்கு மட்டுமின்றி, குடிநீருக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட பகுதிகளில் தண்ணீர் பிரச்னையை போக்கும் வகையில் அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்.
அமராவதி ஆற்றில், திருப்பூர் மாவட்ட பகுதியில் 60-க்கு மேற்பட்ட கிணறுகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் மேற்கண்ட பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆற்றோரப் பகுதி விவசாயிகளும் பாசனத்திற்கு ஆற்றுநீரை பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் தேவையான குடிநீர் கிடைக்கவும், பாசனத்திற்காகவும் அமராவதி அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட வேண்டும்.
90 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்பொழுது 80 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. வறட்சி நிலவும் இச்சூழ்நிலையில் அமராவதி அணையின் தண்ணீரை உடனடியாக திறந்துவிட்டு ஆற்றின் கடைக்கோடி பகுதிக்கும் சென்றடையும் வகையில் நீர்மேலாண்மை செய்வதற்கு ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் திருப்பூர் மாவட்ட திமுக சார்பில் அமராவதி ஆற்றுநீரை நம்பியுள்ள பொதுமக்கள், கால்நடை வளர்ப்போர், விவசாயிகளைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment