Sunday, September 14, 2014
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜுக்கு அவர் வெள்ளிக்கிழமை அனுப்பிய கடிதம்:
உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம் பகுதிகளில் போதிய அளவில் பருவமழை பெய்யாத காரணத்தால் வறட்சி நிலவுகிறது. பாசனத்திற்கு மட்டுமின்றி, குடிநீருக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட பகுதிகளில் தண்ணீர் பிரச்னையை போக்கும் வகையில் அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்.
அமராவதி ஆற்றில், திருப்பூர் மாவட்ட பகுதியில் 60-க்கு மேற்பட்ட கிணறுகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் மேற்கண்ட பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆற்றோரப் பகுதி விவசாயிகளும் பாசனத்திற்கு ஆற்றுநீரை பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே, பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் தேவையான குடிநீர் கிடைக்கவும், பாசனத்திற்காகவும் அமராவதி அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட வேண்டும்.
90 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்பொழுது 80 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. வறட்சி நிலவும் இச்சூழ்நிலையில் அமராவதி அணையின் தண்ணீரை உடனடியாக திறந்துவிட்டு ஆற்றின் கடைக்கோடி பகுதிக்கும் சென்றடையும் வகையில் நீர்மேலாண்மை செய்வதற்கு ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் திருப்பூர் மாவட்ட திமுக சார்பில் அமராவதி ஆற்றுநீரை நம்பியுள்ள பொதுமக்கள், கால்நடை வளர்ப்போர், விவசாயிகளைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
0 comments:
Post a Comment