Sunday, September 14, 2014
இது குறித்த விவரம்:
உடுமலை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் சுகந்தி. இவர், சம்பவ தினமான வியாழக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சுகந்தியின் வாயை பொத்தி அவர் மீது கடும் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதையடுத்து, அருகில் இருந்த மருத்துவமனை ஊழியர்கள் சுகந்தியை காப்பாற்றி தாக்குதல் நடத்தியவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து தலைமை மருத்துவ அலுவலர் காவல்துறையில் எழுத்துமூலம் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய விசாரணையில், உடுமலை சென்னிமலைபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் தான் செவியலியர் சுகந்தி மீது தாக்குதல் நடத்தியவர் எனத் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சுப்பிரமணியம் மீது போலீஸார் எந்த வழக்கும் பதிவு செய்யாமல் விட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், செவிலியர் சுகந்தி மீது தாக்குதல் நடத்திய சுப்பிரமணியத்தை கைது செய்யாத போலீஸாரை கண்டித்து அரசு ஊழியர் சங்கம் சார்பில், உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உடுமலை டிஎஸ்பி பிச்சை, ஆய்வாளர் தவமணி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில், சுப்பிரமணியத்தை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.
பேச்சுவார்த்தையில், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பி.ஆனந்தராஜ், மா.பாலசுப்பிரமணியம், பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் சனிக்கிழ மை மாலை சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
0 comments:
Post a Comment