Friday, September 12, 2014
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே பாப்பிணி அடுத்துள்ள அழகேகவுண்டன் புதூரை சேர்ந்தவர் சிதம்பரம் (55). இவர், தனது தோட்டத்தில் 48 ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று வழக்கம் போல் ஆடுகளை மேய்த்து, தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் காலை யில் தோட்டத்திற்கு வந்த சிதம்பரம் பட்டியில் இருந்த ஆடுகள் அனைத்தும் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். திருடு போன ஆடுகளின் மதிப்பு ரூ.3 லட்சமாகும்.
பின்னர் இதுகுறித்து காங்கயம் போலீசில் புகார் அளித்தார். இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கயம் நட்டார்பாளையத்தில் உள்ள பெரியசாமி என்பவரின் தோட்டத்தில் இருந்த 20 ஆடுகள் திருடு போனது. அதே போல், செலாம்பாளையம் சிவசாமி என்பவரின் தோட்டத்தில் இருந்த 40 ஆடுகளும், குட்டவலசு துரைசாமி என்பவரின் தோட்டத்தில் இருந்த 21 ஆடுகளும் திருடு போனது. தொடர்ச்சியாக ஆடுகள் இப்பகுதியில் திருடு போவது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘காங் கயம், வெள்ளகோவில் பகுதி மிகவும் வறட்சியான பகுதியாகும். இங்கு பெரியளவில் விவசாயம் நடைபெறு வதில்லை. இங்கு உள்ள விவசாயிகளுக்கு வருமானம் என்றால் அது ஆடு வளர்ப்பு தான். இதனால் இங்குள்ள அனைத்து தோட்டத்திலும் விவசாயிகள் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். ஆடுகளை இரவு நேரத்தில் பட்டியில் அடைத்து வைத்து விட்டு, காலையில் வந்து மேய்ச்சலுக்கு விடுவோம். ஆனால், சமீபகாலமாக ஆடுகளை பட் டியில் அடைத்து வைத்து விட்டு காலையில் வந்து பார்த்தால் ஆடுகள் பட்டியில் இருப்பதில்லை. திருடு போய் விடுகிறது. இதனால் எங்களுக்கு ஆயிரக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது. ஆடுகளை வளர்த்து தான் நாங்கள் பிழைப்பு நடத்தி வருகிறோம். இந்நிலையில், ஆடுகள் திருடு போவது எங்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும், இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டு வரு கிறோம். எனவே போலீசார், ஆடு திருடும் கும்பலை விரைவில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுதொடர்பாக காங்கயம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...
0 comments:
Post a Comment