Tuesday, September 16, 2014

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
மடத்துக்குளத்தை அடுத்த நரசிங்காபுரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கருடாழ்வார் ஆகிய தெய்வங்களுக்கு மூல ஸ்தாபனம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், ஒருநிலை கோபுர விமானம் ஆகியவை அமைத்து கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி கடந்த 13–ந்தேதி மாலை 5 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல் மங்கள இசையுடன் தொடங்கி ரக்ஷாபந்தனம், யாகசாலை பூஜைகள், ஹோமங்கள், ஆகுதிகள், முளைப்பாரி எடுத்தல், புதிய விக்ரகங்கள் பிம்பசுத்தி, இறைதிருமேனிகள் நிலைப்படுத்துதல் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. நேற்று காலை 6.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி மங்கள இசையுடன் தொடங்கி லட்சுமி கணபதி ஹோமம், 4–ம் கால யாக வேள்விகள், மகா பூர்ணாகுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதை தொடர்ந்து மகா அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்னதானம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

0 comments: