Tuesday, September 16, 2014
மடத்துக்குளத்தை அடுத்த நரசிங்காபுரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கருடாழ்வார் ஆகிய தெய்வங்களுக்கு மூல ஸ்தாபனம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், ஒருநிலை கோபுர விமானம் ஆகியவை அமைத்து கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி கடந்த 13–ந்தேதி மாலை 5 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல் மங்கள இசையுடன் தொடங்கி ரக்ஷாபந்தனம், யாகசாலை பூஜைகள், ஹோமங்கள், ஆகுதிகள், முளைப்பாரி எடுத்தல், புதிய விக்ரகங்கள் பிம்பசுத்தி, இறைதிருமேனிகள் நிலைப்படுத்துதல் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. நேற்று காலை 6.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி மங்கள இசையுடன் தொடங்கி லட்சுமி கணபதி ஹோமம், 4–ம் கால யாக வேள்விகள், மகா பூர்ணாகுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதை தொடர்ந்து மகா அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்னதானம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment