Tuesday, September 16, 2014
மடத்துக்குளத்தை அடுத்த நரசிங்காபுரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கருடாழ்வார் ஆகிய தெய்வங்களுக்கு மூல ஸ்தாபனம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், ஒருநிலை கோபுர விமானம் ஆகியவை அமைத்து கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி கடந்த 13–ந்தேதி மாலை 5 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல் மங்கள இசையுடன் தொடங்கி ரக்ஷாபந்தனம், யாகசாலை பூஜைகள், ஹோமங்கள், ஆகுதிகள், முளைப்பாரி எடுத்தல், புதிய விக்ரகங்கள் பிம்பசுத்தி, இறைதிருமேனிகள் நிலைப்படுத்துதல் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. நேற்று காலை 6.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி மங்கள இசையுடன் தொடங்கி லட்சுமி கணபதி ஹோமம், 4–ம் கால யாக வேள்விகள், மகா பூர்ணாகுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதை தொடர்ந்து மகா அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்னதானம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment