Tuesday, September 16, 2014
உடுமலையில் அண்ணா பிறந்தநாளையொட்டி அண்ணாவின் உருவசிலைக்கு அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.
அ.தி.மு.க.
மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. உடுமலை மத்திய பஸ்நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் நடந்த விழாவிற்கு பொதுக்குழு உறுப்பினர் எம்.கண்ணாயிரம் தலைமை தாங்கினார். அங்குள்ள அண்ணாவின் உருவசிலைக்கு மடத்துக்குளம் தொகுதி சி.சண்முகவேலு எம்.எல்.ஏ. மாலை அணிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் வக்கீல் ஏ.கே.மனோகரன், கூட்டுறவு வீடுகட்டும் சங்க இயக்குனர் பி.சிதம்பரநாதன், நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் என்.வாசுதேவன், நகர பேரவை செயலாளர் வி.என்.வெங்கடேஷ், நகர கழக மாவட்ட பிரதிநிதி யு.ஜி.கே.சற்குணசாமி, துணைச்செயலாளர் எம்.முருகவேல், கவுன்சிலர் ஜி.தனலட்சுமி, ஜெ.ஹரிபிரசாத், ஜெ.மணிவண்ணன், பாபு, கணியூர் நடராஜ், பொற்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.
தி.மு.க. சார்பில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவிற்கு நகர செயலாளர் சி.வேலுச்சாமி தலைமை தாங்கி உடுமலை மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணாவின் முழுஉருவ சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் செ.செல்வராஜ், நகர கழக அவைத்தலைவர் இந்துபாய் என்கிற சாகுல்அமீது, துணை செயலாளர் வக்கீல் எம்.வெங்கடாசலம், பொருளாளர் டி.ஜவஹர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தங்கராஜ் என்கிற மெய்ஞான மூர்த்தி, நகர இளைஞர் அணி அமைப்பாளர் தா.வெற்றிவேல், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், முபாரக் அலி, நகராட்சி கவுன்சிலர்கள் அப்பாசாமி, பாலசுப்பிரமணியன், ஆதம்ஸா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment