Tuesday, September 16, 2014

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அங்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் இயற்கை இன்னல்கள் ஏற்படும்போது தானே காப்பாற்றியும், பிறரை காப்பாற்றுவது எவ்வாறு என்று செயல்முறை விளக்கம் குறித்த நிகழ்ச்சி பல்லடத்தில் உள்ள மணிமகாலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பல்லடம் தாசில்தார் அம்சவேணி, நகராட்சி ஆணையாளர் நாராயணன் முன்னிலையில் நடந்தது.
நிகழ்ச்சியில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் குழு தலைவர் பிஸ்வால் தலைமையில் அக்குழுவினர் வெள்ளம், சுனாமி, பூகம்பம், நிலநடுக்கம், கட்டிடம் இடிந்த பின் அக்கட்டிடத்தில் சிக்கியவர்களை எவ்வாறு காப்பாற்றுவது, வெள்ளப்பெருக்கு வீடு சூழ்ந்து கொண்டால் வெளியேறுவது, பாம்பு கடித்தால் எவ்வாறு முதலில் சிகிச்சை மேற்கொள்வது, விஷவாயு வெளிவரும்போது செய்ய வேண்டியதை குறித்து அக்குழுவினர் செய்து காட்டினார்கள்.

0 comments: