Tuesday, September 16, 2014
உடுமலை அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முயன்றுள்ளனர்
சிறுத்தைப்புலி நடமாட்டம்
உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி பகுதியில் அமராவதி நகர், பெரும்பள்ளம், சாயப்பட்டறை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சின்னாறு வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு சிறுத்தைப்புலி, யானை, மான், காட்டெருமை, செந்நாய், காட்டுபன்றி உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக உள்ளன.
ஒரு சில நேரங்களில் வனப்பகுதியில் இருந்து யானை காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுவதுண்டு. இந்த நிலையில் கடந்த 4–ந்தேதி அமராவதிநகரில் உள்ள பள்ளிக்கு சொந்தமான கன்றுக்குட்டி ஒன்றை சிறுத்தைபுலி கொடூரமாக கடித்து கொன்றுள்ளது. மேலும் வன அதிகாரி வீட்டில் உள்ள நாய்க்குட்டியை கடித்து இழுத்து சென்று உள்ளது.
கூண்டு
மேலும் பல இடங்களில் சிறுத்தைப்புலி நடமாட்டத்தை பார்த்து பொதுமக்கள் பார்த்து அச்சம் அடைந்துள்ளனர். இதனைதொடர்ந்து வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒரு சில இடங்களில் சிறுத்தைப்புலியின் நடமாடத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சிறுத்தைப்புலியை பிடிக்க கன்றுக்குட்டியை அடித்துக்கொன்ற இடத்திற்கு சற்று தொலையில் கூண்டு வைத்துள்ளனர். கூண்டுக்குள் சிறுத்தைப்புலியை பிடிக்க ஆட்டுக்குட்டி ஒன்றையும் வைத்துள்ளனர். அமராவதி நகர் பகுதி மக்களை பீதிக்கு உள்ளாகி வரும் சிறுத்தைப்புலி கூண்டுக்குள் சிக்குமா என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment