Tuesday, September 16, 2014
உடுமலை அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முயன்றுள்ளனர்
சிறுத்தைப்புலி நடமாட்டம்
உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி பகுதியில் அமராவதி நகர், பெரும்பள்ளம், சாயப்பட்டறை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சின்னாறு வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு சிறுத்தைப்புலி, யானை, மான், காட்டெருமை, செந்நாய், காட்டுபன்றி உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக உள்ளன.
ஒரு சில நேரங்களில் வனப்பகுதியில் இருந்து யானை காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுவதுண்டு. இந்த நிலையில் கடந்த 4–ந்தேதி அமராவதிநகரில் உள்ள பள்ளிக்கு சொந்தமான கன்றுக்குட்டி ஒன்றை சிறுத்தைபுலி கொடூரமாக கடித்து கொன்றுள்ளது. மேலும் வன அதிகாரி வீட்டில் உள்ள நாய்க்குட்டியை கடித்து இழுத்து சென்று உள்ளது.
கூண்டு
மேலும் பல இடங்களில் சிறுத்தைப்புலி நடமாட்டத்தை பார்த்து பொதுமக்கள் பார்த்து அச்சம் அடைந்துள்ளனர். இதனைதொடர்ந்து வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒரு சில இடங்களில் சிறுத்தைப்புலியின் நடமாடத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சிறுத்தைப்புலியை பிடிக்க கன்றுக்குட்டியை அடித்துக்கொன்ற இடத்திற்கு சற்று தொலையில் கூண்டு வைத்துள்ளனர். கூண்டுக்குள் சிறுத்தைப்புலியை பிடிக்க ஆட்டுக்குட்டி ஒன்றையும் வைத்துள்ளனர். அமராவதி நகர் பகுதி மக்களை பீதிக்கு உள்ளாகி வரும் சிறுத்தைப்புலி கூண்டுக்குள் சிக்குமா என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment