Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
காங்கயம் அருகேயுள்ள ரங்கபாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 43). கட்டிட மேஸ்திரி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் ரங்கபாளையத்தில் இருந்து திருப்பூருக்கு புறப்பட்டார்.
நாச்சிபாளையம் பிரிவில் தனது நண்பரான லாசர்(50) என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
லாசர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

0 comments: