Monday, September 15, 2014
திருப்பூர் 22 மற்றும் 45–வது வார்டுகளுக்கான வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்கள் அடங்கிய பட்டியல் பொருத்தும் பணி நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி அதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 22 மற்றும் 45–வது வார்டுகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதில் 22–வது வார்டில் 8 வாக்குப்பதிவு மையங்களும், 45–வது வார்டில் 12 வாக்குப்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வார்டுகளில் உள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு 20 எந்திரங்கள் மற்றும் 10 ரிசர்வ் எந்திரங்கள் என மொத்தம் 30 எந்திரங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன.
இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாநகர கமிஷனருமான அசோகன் தலைமையில், 22–வது மற்றும் 45–வது வார்டில் போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில், உதவி தேர்தல் நடத்து அதிகாரிகள் திருமுருகன், தமிழ்செல்வன் ஆகியோர் மேற்பார்வையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. மேலும் வாக்குப்பதிவு மையங்களில் உபயோகப்படுத்தப்படும் பென்சில், ரப்பர், மெழுகு, மை உள்ளிட்ட பொருட்கள் ஒவ்வொரு மையங்களுக்கும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு மையங்களுக்கு அனுப்ப தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணியில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...

0 comments:
Post a Comment