Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
திருப்பூர் 22 மற்றும் 45–வது வார்டுகளுக்கான வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்கள் அடங்கிய பட்டியல் பொருத்தும் பணி நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி அதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 22 மற்றும் 45–வது வார்டுகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதில் 22–வது வார்டில் 8 வாக்குப்பதிவு மையங்களும், 45–வது வார்டில் 12 வாக்குப்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வார்டுகளில் உள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு 20 எந்திரங்கள் மற்றும் 10 ரிசர்வ் எந்திரங்கள் என மொத்தம் 30 எந்திரங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன.
இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாநகர கமிஷனருமான அசோகன் தலைமையில், 22–வது மற்றும் 45–வது வார்டில் போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில், உதவி தேர்தல் நடத்து அதிகாரிகள் திருமுருகன், தமிழ்செல்வன் ஆகியோர் மேற்பார்வையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. மேலும் வாக்குப்பதிவு மையங்களில் உபயோகப்படுத்தப்படும் பென்சில், ரப்பர், மெழுகு, மை உள்ளிட்ட பொருட்கள் ஒவ்வொரு மையங்களுக்கும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு மையங்களுக்கு அனுப்ப தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணியில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

0 comments: