Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
கோவை, : நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிலிம் கிளப் துவக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திரை இயக்குநர், நடிகர் பாக்கியராஜூடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமது மாணவர்களின் திரை துறை ஆர்வம் மேம்படவும், திரை துறையில் மாணவர்கள் விருப்பத்துடன் ஈடுபடுவதற்காக ‘நேரு பிலிம் கிளப்’ துவக்கியுள்ளது. இதற்கான விழாவில் கல்லூரி முதல்வர் அநிருதன் வரவேற்றார். திரை இயக்குநர், நடிகர்  பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் பிலிம் கிளப்பை துவக்கி வைத்தனர். 
கல்லூரி செயலாளர் கிருஷ்ணகுமார் பேசு கையில், ‘ நேரு கல்விக்குழுமம் திரை இயக்குநர் மற்றும் நடிகர் பாக்கியராஜூடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக மாணவர்கள் பயிற்சி காலத்தில் திரைத்துறையை சேர்ந்த வல்லுனர்கள், பிரபலங்களுடன் கலந்து ஆராய்ந்து அனுபவங்கள் பெற இயலும்’ என்றார். மாணவர்கள் பாக்யராஜூடன் திரை க்கதை, வசனம், இயக்கம் ஆகிய துறை சார்ந்து கலந்துரையாடினர். 
கல்லூரி துணை முதல்வர் பாலமுருகன், துணை பேராசிரியர் பாலசந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 comments: