Monday, September 15, 2014
கோவை, :சமூக விஞ்ஞான பயிலரங்கின் முதலாம் ஆண்டு விழா மற்றும் எழுத்தாளர் ப.பா.ரமணி எழுதிய ‘காம்ரேட் பார்வதி கிருஷ்ணன்’ நூல் வெளியீட்டு விழா, கோவை ரயில் நிலையம் எதிரில் திவ்யோதயா அரங்கத்தில் நேற்று நடந்தது.
இந்திய கலாசார நட்புறவுக் கழக பொதுச்செயலாளர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சமூக விஞ்ஞான பயிலரங்க நிர்வாகி குணசேகர் வரவேற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தேசியக்குழு உறுப்பினர் டி.ஞானையா ‘காம்ரேட் பார்வதி கிருஷ்ணன்’ நூலை வெளியிட, அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பொன்னீலன் பெற்றுக் கொண்டார். மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் வாழ்த்துரை வழங்கினார்.
நூல் ஆசிரியர் ப.பா.ரமணி பேசியதாவது:
தமிழகத்தில் பிறந்து பொதுவுடைமை இயக்கத்துக்கு பெருமை சேர்த்தவர்களில் முக்கியமானவர் பார்வதி கிருஷ்ணன். குமாரமங்கலம் ஜமீன் குடும்ப பின்னணி, சென்னை மாகாண முதல்வராக இருந்த டாக்டர் சுப்பராயன் மகள், லண்டன் ஆக்ஸ்போர்டில் கற்ற கல்வி, பெற்ற பட்டம் ஆகியவற்றை துச்சமாக கருதி ஒரு சிறந்த கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து காட்டியவர் பார்வதி கிருஷ்ணன். மாணவர் இயக்க தலைவர், இந்திய நாடக மன்றத்தின் முதல் அமைப்பாளர், உலகறிந்த தொழிற்சங்க தலைவர், துணிச்சல் மிக்க நாடாளுமன்ற உறுப்பினர், தனது கணவர் என்.கே.கிருஷ்ணன் உடன் கோவை ஜில்லா மில் தொழிலாளர் சங்கத்தை கட்டி வளர்த்தவர்.
அனைத்திற்கும் மேல் சுயவிளம்பரத்தை விரும்பும் ஆர்ப்பாட்ட அரசியல்வாதிகளுக்கு மத்தியில் ஓர் எளிமையான அரசியல் வாழ்க்கை வாழ்ந்தவர். இத்தகைய சிறப்புமிக்க பார்வதி கிருஷ்ணனின் வாழ்க்கை குறிப்புகளின் தொகுப்பாக ‘காம்ரேட் பார்வதி கிருஷ்ணன்’ நூல் வெளிவந்துள்ளது. இந்நூல் பார்வதி கிருஷ்ணனின் எளிமையான வாழ்க்கையை குறித்து இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், அவர் வழி நடக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு ப.பா.ரமணி பேசினார்.
விழாவில், கவிஞர் புவியரசு, மூத்த வங்கி ஊழியர் சங்க தலைவர் ஜோசப், வடிவேலு, சுந்தரம், மவுனசாமி, சுப்ரமணியம், ராஜம், ரகுபதி, கோட்டியப்பன், ராம்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்திய கலாசார நட்புறவுக் கழக பொதுச்செயலாளர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சமூக விஞ்ஞான பயிலரங்க நிர்வாகி குணசேகர் வரவேற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தேசியக்குழு உறுப்பினர் டி.ஞானையா ‘காம்ரேட் பார்வதி கிருஷ்ணன்’ நூலை வெளியிட, அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பொன்னீலன் பெற்றுக் கொண்டார். மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் வாழ்த்துரை வழங்கினார்.
நூல் ஆசிரியர் ப.பா.ரமணி பேசியதாவது:
தமிழகத்தில் பிறந்து பொதுவுடைமை இயக்கத்துக்கு பெருமை சேர்த்தவர்களில் முக்கியமானவர் பார்வதி கிருஷ்ணன். குமாரமங்கலம் ஜமீன் குடும்ப பின்னணி, சென்னை மாகாண முதல்வராக இருந்த டாக்டர் சுப்பராயன் மகள், லண்டன் ஆக்ஸ்போர்டில் கற்ற கல்வி, பெற்ற பட்டம் ஆகியவற்றை துச்சமாக கருதி ஒரு சிறந்த கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து காட்டியவர் பார்வதி கிருஷ்ணன். மாணவர் இயக்க தலைவர், இந்திய நாடக மன்றத்தின் முதல் அமைப்பாளர், உலகறிந்த தொழிற்சங்க தலைவர், துணிச்சல் மிக்க நாடாளுமன்ற உறுப்பினர், தனது கணவர் என்.கே.கிருஷ்ணன் உடன் கோவை ஜில்லா மில் தொழிலாளர் சங்கத்தை கட்டி வளர்த்தவர்.
அனைத்திற்கும் மேல் சுயவிளம்பரத்தை விரும்பும் ஆர்ப்பாட்ட அரசியல்வாதிகளுக்கு மத்தியில் ஓர் எளிமையான அரசியல் வாழ்க்கை வாழ்ந்தவர். இத்தகைய சிறப்புமிக்க பார்வதி கிருஷ்ணனின் வாழ்க்கை குறிப்புகளின் தொகுப்பாக ‘காம்ரேட் பார்வதி கிருஷ்ணன்’ நூல் வெளிவந்துள்ளது. இந்நூல் பார்வதி கிருஷ்ணனின் எளிமையான வாழ்க்கையை குறித்து இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், அவர் வழி நடக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு ப.பா.ரமணி பேசினார்.
விழாவில், கவிஞர் புவியரசு, மூத்த வங்கி ஊழியர் சங்க தலைவர் ஜோசப், வடிவேலு, சுந்தரம், மவுனசாமி, சுப்ரமணியம், ராஜம், ரகுபதி, கோட்டியப்பன், ராம்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
0 comments:
Post a Comment