Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
கூடலூர்– ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை சீர மைக்ககோரி அரசு ஊழி யர்கள் சங்கத்தினர் ஆர்ப் பாட்டம் நடத்தினர்.
தேசிய நெடுஞ்சாலை
கூடலூர்– ஊட்டி தேசிய நெடுஞ்சாலை கடந்த 2 ஆண் டுகளாக மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் மற்றும் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான வாகனங் கள் பழுதடைந்த சாலையில் செல்ல முடியாமல் பயணிகள் அவதி அடைந்து வருகின்ற னர்.
இதனால் இந்த சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என அனைத்து பொதுநல அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் சாலை அமைக்க ரூ.18 கோடி டெண்டர் விடப் பட்ட நிலையில் பணிகள் தொடங்காமல் காலம் தாழ்த் தப்பட்டு வருகிறது.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் மத்திய– மாநில அரசு மற்றும் பொதுத் துறை ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கூடலூர்– ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் துக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார்.
இதில், இந்திய பள்ளி ஆசிரி யர் கூட்டமைப்பு செயலாளர் அன்பழகன், முதுகலைப்பட்ட தாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சங்கர், சி.ஐ.டி.யூ. கிருஷ்ணமூர்த்தி, பி.எஸ்.என். எல். அருட்செல்வம், செய்தலி, சுனில்குமார், பத்மநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்ன தாக செயலாளர் கருணாநிதி வரவேற்றார் முடிவில் ஒருங்கி ணைப்பு குழு பொருளாளர் அஜயகுமார் நன்றி கூறி னார்.

0 comments: