Showing posts with label கூடலூர். Show all posts
Showing posts with label கூடலூர். Show all posts
Monday, September 15, 2014
கூடலூர்– ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை சீர மைக்ககோரி அரசு ஊழி யர்கள் சங்கத்தினர் ஆர்ப் பாட்டம் நடத்தினர்.
தேசிய நெடுஞ்சாலை
கூடலூர்– ஊட்டி தேசிய நெடுஞ்சாலை கடந்த 2 ஆண் டுகளாக மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் மற்றும் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான வாகனங் கள் பழுதடைந்த சாலையில் செல்ல முடியாமல் பயணிகள் அவதி அடைந்து வருகின்ற னர்.
இதனால் இந்த சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என அனைத்து பொதுநல அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் சாலை அமைக்க ரூ.18 கோடி டெண்டர் விடப் பட்ட நிலையில் பணிகள் தொடங்காமல் காலம் தாழ்த் தப்பட்டு வருகிறது.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் மத்திய– மாநில அரசு மற்றும் பொதுத் துறை ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கூடலூர்– ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் துக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார்.
இதில், இந்திய பள்ளி ஆசிரி யர் கூட்டமைப்பு செயலாளர் அன்பழகன், முதுகலைப்பட்ட தாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சங்கர், சி.ஐ.டி.யூ. கிருஷ்ணமூர்த்தி, பி.எஸ்.என். எல். அருட்செல்வம், செய்தலி, சுனில்குமார், பத்மநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்ன தாக செயலாளர் கருணாநிதி வரவேற்றார் முடிவில் ஒருங்கி ணைப்பு குழு பொருளாளர் அஜயகுமார் நன்றி கூறி னார்.
Friday, September 05, 2014
ஓணம் பண்டிகையை வரவேற்கும் வகையில் கூடலூர் பகுதியில் அத்தப்பூ கோலப் போட்டி நடைபெற்றது. மேலும் விளையாட்டு போட்டிகளும் நடத்தப் பட்டன.
அத்தப்பூ கோலப்போட்டி
கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை வருகின்ற 6-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக ஓணம் பண்டிகைகளை கட்ட தொடங்கி உள்ளது.
ஓணம் பண்டிகையை வரவேற்கும் வகையில்கூடலூர் விமலகிரி கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் சிரேயஸ் அமைப்பு சார்பில் அத்தப்பூ கோலப்போட்டிகள் நடை பெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கண்ணை கவரும் வகையில் அத்தப்பூ கோலம் போட் டனர்.
மேலும் ஆண்கள், பெண் களுக்கு இடையே தனித்தனியா கயிறு இழுப்பது உள்பட பல்வேறு போட்டிகள் நடை பெற்றது. இந்த போட்டி களுக்கு பங்கு குரு ஹெல்டோ காரிக்கொம்பில் தலைமை தாங்கினார். முடிவில் போட் டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் ஓணம் விருந்து பரிமாறப்பட் டது.
மேலும் பெரும்பாலான வீடுகள் முன்பாக அத்தப்பூ கோலங்கள் போடப்பட்டு வருகிறது. இதனால் கூடலூர், பந்தலூர் பகுதி மக்கள் ஓணம் பண்டிகையை வரவேற்க தொடங்கி உள்ளனர்.
அத்தப்பூ கோலப்போட்டி
கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை வருகின்ற 6-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக ஓணம் பண்டிகைகளை கட்ட தொடங்கி உள்ளது.
ஓணம் பண்டிகையை வரவேற்கும் வகையில்கூடலூர் விமலகிரி கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் சிரேயஸ் அமைப்பு சார்பில் அத்தப்பூ கோலப்போட்டிகள் நடை பெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கண்ணை கவரும் வகையில் அத்தப்பூ கோலம் போட் டனர்.
மேலும் ஆண்கள், பெண் களுக்கு இடையே தனித்தனியா கயிறு இழுப்பது உள்பட பல்வேறு போட்டிகள் நடை பெற்றது. இந்த போட்டி களுக்கு பங்கு குரு ஹெல்டோ காரிக்கொம்பில் தலைமை தாங்கினார். முடிவில் போட் டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் ஓணம் விருந்து பரிமாறப்பட் டது.
மேலும் பெரும்பாலான வீடுகள் முன்பாக அத்தப்பூ கோலங்கள் போடப்பட்டு வருகிறது. இதனால் கூடலூர், பந்தலூர் பகுதி மக்கள் ஓணம் பண்டிகையை வரவேற்க தொடங்கி உள்ளனர்.
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

