Showing posts with label கூடலூர். Show all posts
Showing posts with label கூடலூர். Show all posts
Monday, September 15, 2014
கூடலூர்– ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை சீர மைக்ககோரி அரசு ஊழி யர்கள் சங்கத்தினர் ஆர்ப் பாட்டம் நடத்தினர்.
தேசிய நெடுஞ்சாலை
கூடலூர்– ஊட்டி தேசிய நெடுஞ்சாலை கடந்த 2 ஆண் டுகளாக மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் மற்றும் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான வாகனங் கள் பழுதடைந்த சாலையில் செல்ல முடியாமல் பயணிகள் அவதி அடைந்து வருகின்ற னர்.
இதனால் இந்த சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என அனைத்து பொதுநல அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் சாலை அமைக்க ரூ.18 கோடி டெண்டர் விடப் பட்ட நிலையில் பணிகள் தொடங்காமல் காலம் தாழ்த் தப்பட்டு வருகிறது.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் மத்திய– மாநில அரசு மற்றும் பொதுத் துறை ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கூடலூர்– ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் துக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார்.
இதில், இந்திய பள்ளி ஆசிரி யர் கூட்டமைப்பு செயலாளர் அன்பழகன், முதுகலைப்பட்ட தாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சங்கர், சி.ஐ.டி.யூ. கிருஷ்ணமூர்த்தி, பி.எஸ்.என். எல். அருட்செல்வம், செய்தலி, சுனில்குமார், பத்மநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்ன தாக செயலாளர் கருணாநிதி வரவேற்றார் முடிவில் ஒருங்கி ணைப்பு குழு பொருளாளர் அஜயகுமார் நன்றி கூறி னார்.
Friday, September 05, 2014
ஓணம் பண்டிகையை வரவேற்கும் வகையில் கூடலூர் பகுதியில் அத்தப்பூ கோலப் போட்டி நடைபெற்றது. மேலும் விளையாட்டு போட்டிகளும் நடத்தப் பட்டன.
அத்தப்பூ கோலப்போட்டி
கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை வருகின்ற 6-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக ஓணம் பண்டிகைகளை கட்ட தொடங்கி உள்ளது.
ஓணம் பண்டிகையை வரவேற்கும் வகையில்கூடலூர் விமலகிரி கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் சிரேயஸ் அமைப்பு சார்பில் அத்தப்பூ கோலப்போட்டிகள் நடை பெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கண்ணை கவரும் வகையில் அத்தப்பூ கோலம் போட் டனர்.
மேலும் ஆண்கள், பெண் களுக்கு இடையே தனித்தனியா கயிறு இழுப்பது உள்பட பல்வேறு போட்டிகள் நடை பெற்றது. இந்த போட்டி களுக்கு பங்கு குரு ஹெல்டோ காரிக்கொம்பில் தலைமை தாங்கினார். முடிவில் போட் டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் ஓணம் விருந்து பரிமாறப்பட் டது.
மேலும் பெரும்பாலான வீடுகள் முன்பாக அத்தப்பூ கோலங்கள் போடப்பட்டு வருகிறது. இதனால் கூடலூர், பந்தலூர் பகுதி மக்கள் ஓணம் பண்டிகையை வரவேற்க தொடங்கி உள்ளனர்.
அத்தப்பூ கோலப்போட்டி
கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை வருகின்ற 6-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக ஓணம் பண்டிகைகளை கட்ட தொடங்கி உள்ளது.
ஓணம் பண்டிகையை வரவேற்கும் வகையில்கூடலூர் விமலகிரி கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் சிரேயஸ் அமைப்பு சார்பில் அத்தப்பூ கோலப்போட்டிகள் நடை பெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கண்ணை கவரும் வகையில் அத்தப்பூ கோலம் போட் டனர்.
மேலும் ஆண்கள், பெண் களுக்கு இடையே தனித்தனியா கயிறு இழுப்பது உள்பட பல்வேறு போட்டிகள் நடை பெற்றது. இந்த போட்டி களுக்கு பங்கு குரு ஹெல்டோ காரிக்கொம்பில் தலைமை தாங்கினார். முடிவில் போட் டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் ஓணம் விருந்து பரிமாறப்பட் டது.
மேலும் பெரும்பாலான வீடுகள் முன்பாக அத்தப்பூ கோலங்கள் போடப்பட்டு வருகிறது. இதனால் கூடலூர், பந்தலூர் பகுதி மக்கள் ஓணம் பண்டிகையை வரவேற்க தொடங்கி உள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...