Friday, September 19, 2014
கோபி மொடச்சூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் நேற்று மதியம் பவானி புதிய பஸ்நிலையத்தில் இருந்து மைலம்பாடி வழியாக செல்லும் பஸ்சில்ஏறி அமர்ந்து இருந்தார். அப்போது இவர் அமர்ந்து இருந்த இருக்கைக்கு முன்பு பஸ் டிரைவர் போன்று காக்கிச்சட்டை அணிந்த ஒருவர் அமர்ந்து இருந்தார். அப்போது ஆறுமுகத்துக்கும், அந்த நபருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் மறைத்து வைத்து இருந்த பிளேடால் ஆறுமுகத்தை கழுத்து, மார்பு மற்றும் கைகளில் அறுத்துவிட்டு தப்பி ஓடினார். அந்த மர்மநபரை பிடிக்க ஆறுமுகம் ரத்தம் சொட்ட சொட்ட ஓடினார். ஆனால் அந்த நபரை பிடிக்க முடியவில்லை. இதனால் பஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆறுமுகத்தை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆறுமுகத்தை பிளேடல் கீறிவிட்டு தப்பிஓடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment