Friday, September 19, 2014
ஈரோடு அருகே அனுமதியின்றி இயங்கிய தனியார் ‘சிப்ஸ்’
ஆலைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
சீல் வைப்பு
ஈரோடு அருகே முள்ளாம்பரப்பை அடுத்த அசோகபுரம் பகுதியில் கோவையை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான ‘சிப்ஸ்’
தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலை முறையாக அனுமதியின்றி இயங்கி வருவதாகவும், சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாகவும் ஈரோடு மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இதனையடுத்து மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி கருணாநிதி உள்பட 7 பேர் கொண்ட குழுவினர் அந்த ஆலைக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த ஆலை அனுமதியின்றி இயங்கியது தெரிய வந்தது. இதையொட்டி அந்த ஆலைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பறிமுதல்
மேலும் ஆலையில் இருந்த சிப்ஸ், முறுக்கு மற்றும் எண்ணை உள்பட ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள உணவுப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட உணவுபாதுகாப்புத்துறை அதிகாரி கருணாநிதி கூறும்போது,`` இந்த ஆலையில் பறிமுதல் செய்யப்பட்ட சிப்ஸ் மற்றும் உணவுப்பொருட்களை கோவை உணவு பகுப்பு ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இன்னும் 15 நாட்களில் உணவுப்பொருட்களின் பரிசோதனை முடிவுதெரியவரும். தரமற்ற உணவுப்பொருட்களை தயாரித்தது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்`` என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...

0 comments:
Post a Comment