Friday, September 19, 2014
ஈரோடு அருகே அனுமதியின்றி இயங்கிய தனியார் ‘சிப்ஸ்’
ஆலைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
சீல் வைப்பு
ஈரோடு அருகே முள்ளாம்பரப்பை அடுத்த அசோகபுரம் பகுதியில் கோவையை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான ‘சிப்ஸ்’
தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலை முறையாக அனுமதியின்றி இயங்கி வருவதாகவும், சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாகவும் ஈரோடு மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இதனையடுத்து மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி கருணாநிதி உள்பட 7 பேர் கொண்ட குழுவினர் அந்த ஆலைக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த ஆலை அனுமதியின்றி இயங்கியது தெரிய வந்தது. இதையொட்டி அந்த ஆலைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பறிமுதல்
மேலும் ஆலையில் இருந்த சிப்ஸ், முறுக்கு மற்றும் எண்ணை உள்பட ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள உணவுப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட உணவுபாதுகாப்புத்துறை அதிகாரி கருணாநிதி கூறும்போது,`` இந்த ஆலையில் பறிமுதல் செய்யப்பட்ட சிப்ஸ் மற்றும் உணவுப்பொருட்களை கோவை உணவு பகுப்பு ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இன்னும் 15 நாட்களில் உணவுப்பொருட்களின் பரிசோதனை முடிவுதெரியவரும். தரமற்ற உணவுப்பொருட்களை தயாரித்தது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்`` என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி 9.9.16 திருச்சி கர்நாடகா அரசை கண்டித்தும் தண்ணீர் பிரச்சனையை வழியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
0 comments:
Post a Comment