Friday, September 19, 2014
ஈரோடு அருகே அனுமதியின்றி இயங்கிய தனியார் ‘சிப்ஸ்’
ஆலைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
சீல் வைப்பு
ஈரோடு அருகே முள்ளாம்பரப்பை அடுத்த அசோகபுரம் பகுதியில் கோவையை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான ‘சிப்ஸ்’
தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலை முறையாக அனுமதியின்றி இயங்கி வருவதாகவும், சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாகவும் ஈரோடு மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இதனையடுத்து மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி கருணாநிதி உள்பட 7 பேர் கொண்ட குழுவினர் அந்த ஆலைக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த ஆலை அனுமதியின்றி இயங்கியது தெரிய வந்தது. இதையொட்டி அந்த ஆலைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பறிமுதல்
மேலும் ஆலையில் இருந்த சிப்ஸ், முறுக்கு மற்றும் எண்ணை உள்பட ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள உணவுப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட உணவுபாதுகாப்புத்துறை அதிகாரி கருணாநிதி கூறும்போது,`` இந்த ஆலையில் பறிமுதல் செய்யப்பட்ட சிப்ஸ் மற்றும் உணவுப்பொருட்களை கோவை உணவு பகுப்பு ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இன்னும் 15 நாட்களில் உணவுப்பொருட்களின் பரிசோதனை முடிவுதெரியவரும். தரமற்ற உணவுப்பொருட்களை தயாரித்தது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்`` என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மடத்துக்குளம் பேரூராட்சி கழுகரையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான பொய் வழக்கிலிருந்து விரைவில் மீண்டு வந்து தமிழக ஆட்சிப் பொறுப்...
-
கோவை, :கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ராஜ்குமார் (49) கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உள்ளார்...
-
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மான்பிடிமங்கலம் சக்திவேல் அவர்களின் மனைவி நித்யா(25) மற்றும் அவர்களது 8 மாத கைக்குழந்தை பவ்யஸ...
-
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை தேஜஸ் ரோட்டரி சங்கம் அமைப்பின் சார்பில் 4 துறைகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தத் துறையில் சிறந்த முறையில் ச...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
0 comments:
Post a Comment