Friday, September 19, 2014

On Friday, September 19, 2014 by farook press in ,    
சித்தோடு ராயபாளையம் கூட்டுறவு காலனி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி கவுண்டர். அவருடைய மனைவி பெரியம்மா (வயது 65). இவரை கடந்த 27–8–2003–ம் அன்று திருவாரூரை சேர்ந்த ஆதி என்கிற அருண்குமார் உள்பட 3 பேர் கொலை செய்தனர். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார் உள்பட 3 பேரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு ஈரோடு 3–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 2004–ம் ஆண்டு ஜாமீனில் அருண்குமார் வெளியே வந்தார். பின்னர் இந்த வழக்கு விசாரணையில் கோர்ட்டில் ஆஜராகமல் தலைமறைவானார். இதைத்தொடர்ந்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அருண்குமாரை சித்தோடு போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் தேனி மாவட்டம் தாமரைக்குளம் அருகே உள்ள பெரியகுளம் காலனியில் பதுங்கி இருப்பதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அருண்குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அருண்குமார் ஈரோடு 3–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். அருண்குமார் கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: