Friday, September 19, 2014
சித்தோடு ராயபாளையம் கூட்டுறவு காலனி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி கவுண்டர். அவருடைய மனைவி பெரியம்மா (வயது 65). இவரை கடந்த 27–8–2003–ம் அன்று திருவாரூரை சேர்ந்த ஆதி என்கிற அருண்குமார் உள்பட 3 பேர் கொலை செய்தனர். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார் உள்பட 3 பேரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு ஈரோடு 3–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 2004–ம் ஆண்டு ஜாமீனில் அருண்குமார் வெளியே வந்தார். பின்னர் இந்த வழக்கு விசாரணையில் கோர்ட்டில் ஆஜராகமல் தலைமறைவானார். இதைத்தொடர்ந்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அருண்குமாரை சித்தோடு போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் தேனி மாவட்டம் தாமரைக்குளம் அருகே உள்ள பெரியகுளம் காலனியில் பதுங்கி இருப்பதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அருண்குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அருண்குமார் ஈரோடு 3–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். அருண்குமார் கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருச்சி : மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டி : அக்டோர் 7ம் தேதி கூடுதல் மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு எதிர்க...
-
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மாண்புமிகு நகராட்சி நிர்வா...
-
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். தமாக...
-
திருச்சி 10.01.16 திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க கூட்டு இயக்கம் கண்டன ஆர்பாட்டம் ...
-
நிலமதிப்பை குறைவாக கணக்கிட்டு பத்திரப்பதிவு செய்ததாக பல்லடம் சார்பதிவாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், ...
-
திருச்சி_07.10.18 பருவமழையை காரணம் காட்டி தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்காத தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது-வைக...
-
ஊதியூர் அருகே நொச்சிப்பாளையத்திலிருந்து நல்லிமடம் வழியாக, புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிராமச் சாலை வழியாக இந்தாண்டு பக்தர்கள் அச்சமின்றி பாதய...
0 comments:
Post a Comment