Sunday, September 14, 2014
கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா நாளை (திங்கட்கிழமை) கோவை வருகிறார். இதைதொடர்ந்து கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா கோவை வருகை
கோவை மாநகராட்சி தேர்தல் வருகிற 18–ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் அ.தி.மு.க. சார்பில் மேயர் வேட்பாளராக கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கோவையில் 12–க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.
சுற்றுப்பயணம்
இந்த நிலையில் கோவை மேயர் வேட்பாளர் கணபதிராஜ்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா நாளை (திங்கட்கிழமை) கோவை வருகிறார். அவருடைய சுற்றுப்பயண விவரம் வருமாறு:–
முதல்–அமைச்சர் ஜெயலலிதா நாளை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 4 மணியளவில் கோவை வருகிறார். அவருக்கு கோவை விமான நிலையத்தில் அமைச்சர்கள், கோவை மாநகர் மற்றும் கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. விமான நிலைய வரவேற்பை முடித்துக் கொண்டு ஜெயலலிதா அங்கிருந்து கார் மூலம் அவினாசி சாலை யில் உள்ள அண்ணா சிலை இருக்கும் இடத்துக்கு வருகிறார். அண்ணா பிறந்தநாளையொட்டி அண்ணா சிலைக்கு அவர் மாலை அணிவிக்கிறார்.
சென்னை திரும்புகிறார்
அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஜெயலலிதா கார் மூலம் அருகில் உள்ள வ.உ.சி.பூங்கா மைதானத்துக்கு வருகிறார். அங்கு கோவை மேயர் வேட்பாளராக போட்டியிடும் கணபதிராஜ்குமாரை ஆதரித்து அவர் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அதன் பின்னர் அவர் கார் மூலம் கோவை விமான நிலையம் செல்கிறார். அதன்பிறகு அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
விழாக்கோலம்
முதல்–அமைச்சர் ஜெயலலிதா கோவை வருகையையொட்டி கோவை விழாக்கோலம் பூண்டுள்ளது. அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்கும் கோவை அவினாசி சாலை மற்றும் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் அ.தி.மு.க கொடிகள் மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன, விமான நிலையம் முதல் வ.உ.சி. பூங்கா வரை உள்ள அவினாசி சாலையில் ஜெயலலிதாவை வரவேற்கும் வகையில் ஏராளமான அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆங்காங்கே ஜெயலலிதாவின் பெரிய கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. அவினாசி சாலையின் இரண்டு புறமும் அ.தி.மு.க, கொடிகள் கட்டப்பட்டுள்ளன. பொதுக்கூட்டம் நடைபெறும் வ.உ.சி. பூங்கா மைதானத்தை சுற்றிலும் இரவை பகலாக்கும் வகையில் அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஜெயலலிதா பேசுவதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வருகையையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. கோவை மாநகர போலீசார் மற்றும் திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக் கல், கிருஷ்ணகிரி, திருச்சி, கரூர், தஞ்சை ஆகிய மாவட்ட போலீசாரும் கோவைக்கு இன்று வருகிறார்கள். முதல்–அமைச்சர் வருகைக்காக கோவை மாநகர போலீசார் 1,500 பேர் மற்றும் வெளிமாவட்ட போலீசார் 1,500 பேர் என்று மொத்தம் 3,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முதல்–அமைச்சர் கோவை வருகையையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கோவைக்கு வரும் முக்கிய சாலைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வ.உ.சி.பூங்கா மற்றும் அண்ணா சிலை ஆகிய இடங்களில் 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment