Saturday, September 13, 2014
காங்கயம், செப்.13–
திருப்பூர் மாவட்டம் காங்கயம் பொங்கலூரை அடுத்த தேவம்பாளையத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 50). இவர் கடந்த 10–ந் தேதி குளிப்பதற்கு பி.ஏ.பி. வாய்க்காலுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் பல இடங்களில் அருள்தாசை தேடினர். ஆனால் அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவினாசிபாளையம் போலீசில் அருள்தாஸ் மாயமாகிவிட்டதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அருள்தாசை தேடி வந்தனர். இந்த நிலையில் காங்கயத்தை அடுத்த அலகுமலை முருகன் கோவில் மலையடிவாரத்தில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் ஒரு ஆண் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது அது மாயமான அருள்தாஸ் என்பது தெரிய வந்தது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...

0 comments:
Post a Comment