Saturday, September 13, 2014
திருப்பூர், செப்.13–
திருப்பூர் காங்கயம் கிராஸ் ரோடு கே.என்.பி. காலனியை சேர்ந்தவர் முகமது இலியாஸ் (வயது 21). எலெக்ட்ரீசியன். இவருக்கும் நஜீரா பானு (21) என்பவருக்கும் கடந்த 17.11.2013–ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது நஜீரா பானுவின் பெற்றோர் 8 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கமும் கொடுத்தனர்.
திருமணமான 15 நாட்களில் முகமது இலியாசும், அவரது தாயார் செரின் பேகமும் சேர்ந்து கொண்டு நஜீரா பானுவிடம் வரதட்சணையாக 4 பவுன் தங்க நகைகளும், ரூ.2 லட்சம் ரொக்க பணமும் வாங்கி வரும்படி கூறி கொடுமைப்படுத்தினர்.
இந்த கொடுமை தாங்க முடியாமல் நஜீரா பானு வீட்டில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து நஜீரா பானு நேராக தனது தந்தை வீட்டுக்கு சென்று தங்கினார். உடல்நலம் தேறியவுடன் மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்தார்.
அங்கு முகமது இலியாஸ் தனது தாயார் செரின் பேகத்துடன் சேர்ந்து கொண்டு மீண்டும் நஜீரா பானுவை கொடுமைப்படுத்த ஆரம்பித்தனர். சிகரெட்டால் நஜீரா பானுவின் தொடையில் சூடு வைத்தும், ஆக்ஷா பிளேடை தீயில் வைத்து சூடுபடுத்தி அவரது உடம்பில் காயங்கள் ஏற்படுத்தியும் கொடுமைப்படுத்தி வந்தனர்.
நாளுக்கு நாள் இருவரது கொடுமையும் தீவிரமானதால் பொறுத்துக் கொள்ள முடியாத நஜீரா பானு திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்துரினிஷா வழக்குப்பதிவு செய்து முகமது இலியாஸ் மற்றும் செரின் பேகத்தை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...

0 comments:
Post a Comment