Saturday, September 13, 2014
வடவள்ளி, செப்.13–
கோவை செல்வபுரத்தில் இருந்து சுண்டக்காமுத்தூர் செல்லும் சாலையில் புட்டுவிக்கி பாலம் அமைந்துள்ளது. இப்பாலம் நொய்யலாற்றின் இடையே தரைப்பாலமாக இருந்து வந்தது. இப்பாலத்தை டவுன்ஹால், உக்கடம் செல்லும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன் படுத்தி வந்தனர்.
இந்த பகுதிகளில் மழைக் காலங்களில் பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதன் காரணமாக பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. கோவைப் புதூர், சுண்டக்காமுத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து வருபவர்கள் சுற்றுப்பாதை வழியாக சுமார் 29 கிலோ மீட்டர் தூரம் பயணித்து நகரை அடைந்து வந்தனர். இதற்கு தீர்வு கோரி அரசிடம் கோரிக்கை வைக்கப் பட்டது. இதனை தொடர்ந்து ரூ.15 கோடி செலவில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 70 மீட்டர் நீளமும், 7 மீட்டர் அகலமும் கொண்ட பெரிய மேல்மட்ட பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.
சிமெண்டு கான் கிரீட்டிலான 5 தூண்களுடன் பிரமாண்டமாக பாலம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. தற்போது பாலம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. உக்கடத்தில் இருந்து சுண்டக்காமுத்தூர் வரையிலான இணைப்பு சாலையை 7 மீட்டர் அகலத்துக்கு விரிவுபடுத்தும் பணி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து பொதுப் பணித்துறை அதிகாரி கூறும்போது பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. தேர்தல் முடிவடைந்த பின்னர் பாலம் அடுத்த மாதம் திறக்கப்படும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment