Wednesday, September 24, 2014
மதுரை விமான நிலையத்தில் திங்கள்கிழமை இரவு ஒன்றேகால் கிலோ தங்கம் கடத்தி வந்தவரை போலீஸார் கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
மதுரை விமான நிலையத்தில் திங்கள்கிழமை மாலை கொழும்பிலிருந்து விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
பின்னர், சுங்கத்துறையினர் நடத்திய சோதனையின் போது சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த அப்துல்வஹாப்(40) என்பவர் கொண்டு வந்த டேபிள் ஃபேன், ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர்களில் சிறிய சிறிய கட்டிகளாக தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் 12 கட்டிகளாக இருந்த ஒன்றேகால் கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதன் மதிப்பு சுமார் ரூ. 33 லட்சமாகும். இவர் துபையிலிருந்து கொழும்பு வந்து, அங்கிருந்து மதுரைக்கு வந்துள்ளார்.
இதையடுத்து, சுங்க இலாகா அதிகாரிகள் அப்துல்வஹாப்பை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒருசில இடங்களில் கள்ள ஓட்டு ப...
-
திருச்சி 13.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment