Tuesday, September 02, 2014

On Tuesday, September 02, 2014 by Unknown in ,    


தங்களை மிரட்டும் வணிகவியல் துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தனியார் கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஊத்துக்குளி அருகே நடுப்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி உள்ளது.
இதில், கலை, அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை மாணவர்கள், தங்களை துறைத் தலைவர் மிரட்டுவதாகக் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் காங்கயம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுருளிராஜா, ஊத்துக்குளி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் சமரசம் பேசினர். இது தொடர்பாக புகார் மனு அளிக்குமாறும்,
அதன்பின் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் போலீஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் சாலை மறியலைக் கைவிட்டனர்.

0 comments: