Thursday, September 25, 2014
தமிழகத்தில் உள்ள 32 முஸ்லிம் அமைப்புகள் மற்றும் இந்து அமைப்புகளின் செயல்பாடுகளை கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்–இந்து அமைப்புகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:–
கோவை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் மற்றும் இந்து அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து கண்காணித்து வருகிறோம். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து முன்னணி தலைவர் கொலை வழக்கில் முக்கிய தீவிரவாதியான வைகறை சாகுல் (27) துடியலூர் பகுதியில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், இந்து மத தலைவர்களை கொல்ல திட்டமிடுவதற்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை தீவிரவாதிகள் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.
இதற்கான புதிய அமைப்பில் உள்ள தீவிரவாதிகள் ஸ்பி லண்டர் செல்ஸ் எனப்படும் சிமி இயக்கத்தின் முன்னாள் மாணவர் அமைப்பினர் என தெரியவந்துள்ளது.
இந்த தீவிரவாத அமைப்பு கடந்த செப்டம்பர் 2001–ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு இந்த அமைப்பில் இணைக்கப்பட்டனர். அவர்கள் மூலம் தீவிரவாத செயல்கள் செய்ய திட்ட மிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
எனவே கோவை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகளை கண்காணிக்க தொடங்கியுள்ளோம். இது தவிர கடந்த 1998 ஆண்டு நடைபெற்ற கோவை குண்டு வெடிப்பின் பழைய குற்றவாளிகள் 150 பேரும் எங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர் களது செயல்பாடுகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இத்துடன் இந்து அமைப்புகளும் கண்காணிக்கப்படுகிறது. இந்து–முஸ்லிம் மோதலை தடுக்கவே இந்த அமைப்புகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இத்துடன் மாநிலம் முழுவதும் தீவிரவாதிகள் மக்களுடன் மக்களாக இணைந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் தங்களது தீவிரவாத அமைப்பில் இருந்து விலகி தனித்து இயங்கி வருகின்றனர். அவர்களுக்கு தங்கள் அமைப்பில் உள்ள சக நபர் யார் என்பது கூட தெரியாது. தலைவரின் கட்டுப்பாட்டுக்கு இணங்க செயல்படுகிறார்கள். அவர்களையும் கண்டறியும் பணி மாநிலம் முழுவதும் நடை பெற்று வருகிறது.
சமீபத்திய கண்காணிப்பில் தற்போது பிரபலமடைந்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். எனப்படும் இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அண்டு சிரியா தீவிரவாத அமைப்பில் இந்திய முஸ்லிம் இளைஞர்களை சேர்க்க மாநிலம் முழுவதும் ரகசியமாக மூளைச்சலவை செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் அதிர்ச்சி தரும் விதமாக முஸ்லிம் இளைஞர்களை சிலிப்பர் செல்ஸ் எனப்படும் தற்கொலை தீவிரவாத படைக்கு ஆட்களை தேர்வு செய்யவும் முயற்சி நடைபெற்று வருகிறது.
இதை தடுக்க தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி புதிய தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளவர்களை தீவிரவாத அமைப்பினர் உளவு அமைப்பினராக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
எனவே கோவை மாவட்டத்தில் உள்ள 32 முஸ்லிம் மற்றும் இந்து அமைப்புகள் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment