Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    
ஆனைமலை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த புதுப்பெண் மீது லாரி ஏறியது. இதில் கணவர் கண் எதிரே அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருமணம்
பொள்ளாச்சியை அடுத்த கோப்பனூர் புதூரை சேர்ந் தவர் அனந்தபத்மநாபன் (வயது 33). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் உடுமலை திருமூர்த்தி நகரை சேர்ந்த உமாமகேஸ்வரி (28) என்பவருக்கும் இடையே கடந்த மாதம் 29–ந் தேதி திரு மணம் நடை பெற்றது.
இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு அனந்தபத்ம நாபன் தனது மனைவி உமா மகேஸ்வரியுடன் ஆனைமலை மாசாணியம்மன் கோவி லுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் 2 பேரும் சாமி தரிசனம் செய்து விட்டு, மீண்டும் கோப்பனூர்புதூ ருக்கு திரும்பி வந்தனர்.
புதுப்பெண் பலி
பொள்ளாச்சி – மீன்கரை ரோட்டில் அம்பராம் பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதால், 2 பேரும் கீழே விழுந்தனர். அப்போது கேரளாவில் இருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செங்கோடு நோக்கி சென்ற ஒரு லாரி உமா மகேஸ் வரி மீது கண்இமைக்கும் நேரத் தில் ஏறியது. இந்த விபத்தில் அனந்தபத்மநாபன் கண் முன்னே உமாமகேஸ்வரிஉடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அனந்த பத்மநாபன் காய மின்றி உயிர் தப்பினார். மனைவி இறந்து கிடப்பதை பார்த்த அவர் கதறி துடித்தார்.இது குறித்த தகவல் அறிந்த ஆனைமலை போலீசார் விரைந்து சென்று உமா மகேஸ்வரியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக் காக வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
புதுப் பெண் உமா மகேஸ்வரி இறந்த தகவல் அறிந்ததும், அவரது உறவினர்கள் வேட்டைக் காரன் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவரது உடலை பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
இந்த விபத்து தொடர்பாக திருச்செங்கோட்டை சேர்ந்த லாரி டிரைவர் மணி (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments: