Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    
நீலகிரி மாவட்டம் ஊட்டி வண்டிசோலை பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(வயது 47). சமையல் தொழிலாளி. இவர் நேற்று மோட்டார்சைக்கிளில் ஊட்டியில் இருந்து கோவைக்கு வந்து கொண்டிருந்தார். மோட்டார்சைக்கிள் அவினாசி சாலையில் கருமத்தம்பட்டி அருகே உள்ள கொள்ளுபாளையம் பிரிவில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக, எதிரே வந்த வேன் மீது மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த மகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments: