Saturday, September 20, 2014
வால்பாறையில் யானை கள் அட்டகாசத்தை தடுக்க கோரி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யானைகள் அட்டகாசம்
வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக யானை கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வால்பாறையை அடுத்த தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டக்கழக (டேன்டீ) நிர்வாகத்திற்கு சொந்தமான பெரியகல்லார், சின்னக்கல்லார், சின்கோனா ஆகிய பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 12.30 மணிக்கு 15 யானைகள் கொண்ட கூட்டம் பெரியகல்லார் எஸ்டேட் பகுதிக்குள்ளும், 10 யானைகள் கொண்ட கூட்டம் சின்னக்கல் லார் எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் புகுந்தன. இதில் சின்னக்கல்லார் எஸ்டேட் குடியிருப்பில் நுழைந்த காட்டு யானைகள் தொழிலாளர்களுக்கு வழங்க ரேஷன் பொருட்கள் வைக்கப் பட்டு இருந்த அறையின் கதவு, ஜன்னல்களை உடைத்தன. ஆனால் அங்கு ரேஷன் பொருட்கள் ஏதும் இல்லாத தால் அருகில் இருந்த ஆளில் லாத குடியிருப்புகளை இடித்து தள்ளின.
வீடு சூறை
பின்னர் கண்ணன் என்பவ ரின் வீட்டின் முன்புற அறையை இடித்து துதிக் கையை உள்ளே விட்டு சாப்பி டுவதற்கு ஏதும் கிடைக்குமா? என்று தேடின. ஆனால் அங்கு ஒன்றும் இல்லாததால் முன் அறையில் நிறுத்தப்பட்டிருந்த மோட் டார் சைக்கிள், கேபிள் இணைப்பு வழங்கும் கருவி கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை உடைத்து வீட்டை சூறையாடின.
உள் அறையில் தூங்கிக் கொண்டிருந்த கண்ணன், தனது வயதான தாயாரை வீட்டின் பின்பக்க வழியாக அழைத்துக் கொண்டு, அருகில் இருந்த குடியிருப்புக்குள் சென்று விட்டார். பின்னர் எஸ்டேட் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து யானைகளை துரத்தினார்கள். ஆனால் யானைகள் செல்லாமல் அங்கே நின்று, கொண்டுதொழிலாளர்களை துரத்தின. தொடர்ந்து வனத்துறையின ருக்கு தகவல் கொடுக்கப்பட் டது. வனத்துறையினர் வருவ தற்குள் மீண்டும் யானைகள் வீட்டை சேதப்படுத்தி விட்டு காட்டுக்குள் சென்றன.
தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
இந்த நிலையில் யானை களின் அட்டகாசத்தை தடுக்க கோரி சின்னக்கல்லார் எஸ்டேட் தொழிலாளர்கள் நேற்று அந்த பகுதியின் வார்டு கவுன் சிலர் சுதாகர் மற்றும் வால்பாறை கூட்டுறவு நகர வங்கி இயக்குனர் பெருமாள் ஆகியோர் தலை மையில் வேலைநிறுத்த போராட்டத் தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தொழிலாளர்கள் கூறும்போது, தொடர்ந்து காட்டுயானைகளால் பாதிப் புக்குள்ளாகி வருகிறோம். உயிருக்கு உத்தரவாதம் இல்லை. போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை டேன்டீ நிர்வாகமும், வனத்துறையின ரும் எடுக்க வேண்டும். யானை கள் நடமாட்டம் அதிகமுள்ள நாட்களில் 2 கும்கி யானை களை கொண்டு வந்து பாது காப்பு பணியில் ஈடுபட வேண்டும். கூடுதலாக வனத் துறையினரை போதிய வாகன வசதியுடன் பாதுகாப்பு பணி யில் ஈடுபடுத்தப்பட வேண் டும். டேன்டீ நிர்வாகம் சார் பில் காட்டு யானைகள் நிற்கக் கூடிய இடங்களை கண்டறிந்து வனத்துறையினருக்கு முன் கூட்டியே தெரிவிப்பதற்கு போதிய பணியாட்களை நியமிக்க வேண்டும் என்று கூறினார்கள்.
ரூ.10 லட்சம்
இது பற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு டேன்டீ டிவிசன் மேலாளர் விக்ரம், மானாம் பள்ளி வனச்சரக அலுவலர் அறிவொளி, ஆகியோர் வந்த னர். அப்போது தொழிலாளர் கள் அவர்களை முற்றுகை யிட்டு தங்களது கோரிக்கை களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவோ அல்லது ஒரு குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வீதம் கொடுத்து தங்களை பணியில் இருந்து விடுவிக்கவோ வேண்டும் என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் அறி வொளி, சின்னக்கல்லார் பகுதியில் குடியிருந்து வரும் தொழிலாளர்களின் வீடுகள் அருகருகே இல்லை. இதனால் காட்டு யானைகள் எளிதாக குடியிருப்புக்குள் புகுந்து விடுகின்றன. எனவே பி.ஏ.பி. நிர்வாகத்திற்கு சொந்தமான பல குடியிருப்புகள் காலியாக உள்ளன. இந்த வீடுகளுக்கு எஸ்டேட் தொழிலாளர்களை மாற்றி விட்டால் காட்டு யானைகளின் தொல்லை அதிகம் இருக்காது என்று டிவிசனல் மேலாளரிடம் தெரிவித்தார்.
அப்போது அங்கு வந்த வால்பாறை தாசில்தார் நேரு விடமும், எஸ்டேட் தொழி லாளர்கள் இதே கோரிக்கையை முன்வைத்து வனத்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். இது குறித்து மாவட்ட கலெக்ட ரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் நேரு எஸ்டேட் தொழிலாளர்களி டம் உறுதி கூறினார்.
இதைத்தொடர்ந்து தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினர். தொழிலாளர் களின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
யானைகள் அட்டகாசம்
வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக யானை கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வால்பாறையை அடுத்த தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டக்கழக (டேன்டீ) நிர்வாகத்திற்கு சொந்தமான பெரியகல்லார், சின்னக்கல்லார், சின்கோனா ஆகிய பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 12.30 மணிக்கு 15 யானைகள் கொண்ட கூட்டம் பெரியகல்லார் எஸ்டேட் பகுதிக்குள்ளும், 10 யானைகள் கொண்ட கூட்டம் சின்னக்கல் லார் எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் புகுந்தன. இதில் சின்னக்கல்லார் எஸ்டேட் குடியிருப்பில் நுழைந்த காட்டு யானைகள் தொழிலாளர்களுக்கு வழங்க ரேஷன் பொருட்கள் வைக்கப் பட்டு இருந்த அறையின் கதவு, ஜன்னல்களை உடைத்தன. ஆனால் அங்கு ரேஷன் பொருட்கள் ஏதும் இல்லாத தால் அருகில் இருந்த ஆளில் லாத குடியிருப்புகளை இடித்து தள்ளின.
வீடு சூறை
பின்னர் கண்ணன் என்பவ ரின் வீட்டின் முன்புற அறையை இடித்து துதிக் கையை உள்ளே விட்டு சாப்பி டுவதற்கு ஏதும் கிடைக்குமா? என்று தேடின. ஆனால் அங்கு ஒன்றும் இல்லாததால் முன் அறையில் நிறுத்தப்பட்டிருந்த மோட் டார் சைக்கிள், கேபிள் இணைப்பு வழங்கும் கருவி கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை உடைத்து வீட்டை சூறையாடின.
உள் அறையில் தூங்கிக் கொண்டிருந்த கண்ணன், தனது வயதான தாயாரை வீட்டின் பின்பக்க வழியாக அழைத்துக் கொண்டு, அருகில் இருந்த குடியிருப்புக்குள் சென்று விட்டார். பின்னர் எஸ்டேட் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து யானைகளை துரத்தினார்கள். ஆனால் யானைகள் செல்லாமல் அங்கே நின்று, கொண்டுதொழிலாளர்களை துரத்தின. தொடர்ந்து வனத்துறையின ருக்கு தகவல் கொடுக்கப்பட் டது. வனத்துறையினர் வருவ தற்குள் மீண்டும் யானைகள் வீட்டை சேதப்படுத்தி விட்டு காட்டுக்குள் சென்றன.
தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
இந்த நிலையில் யானை களின் அட்டகாசத்தை தடுக்க கோரி சின்னக்கல்லார் எஸ்டேட் தொழிலாளர்கள் நேற்று அந்த பகுதியின் வார்டு கவுன் சிலர் சுதாகர் மற்றும் வால்பாறை கூட்டுறவு நகர வங்கி இயக்குனர் பெருமாள் ஆகியோர் தலை மையில் வேலைநிறுத்த போராட்டத் தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தொழிலாளர்கள் கூறும்போது, தொடர்ந்து காட்டுயானைகளால் பாதிப் புக்குள்ளாகி வருகிறோம். உயிருக்கு உத்தரவாதம் இல்லை. போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை டேன்டீ நிர்வாகமும், வனத்துறையின ரும் எடுக்க வேண்டும். யானை கள் நடமாட்டம் அதிகமுள்ள நாட்களில் 2 கும்கி யானை களை கொண்டு வந்து பாது காப்பு பணியில் ஈடுபட வேண்டும். கூடுதலாக வனத் துறையினரை போதிய வாகன வசதியுடன் பாதுகாப்பு பணி யில் ஈடுபடுத்தப்பட வேண் டும். டேன்டீ நிர்வாகம் சார் பில் காட்டு யானைகள் நிற்கக் கூடிய இடங்களை கண்டறிந்து வனத்துறையினருக்கு முன் கூட்டியே தெரிவிப்பதற்கு போதிய பணியாட்களை நியமிக்க வேண்டும் என்று கூறினார்கள்.
ரூ.10 லட்சம்
இது பற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு டேன்டீ டிவிசன் மேலாளர் விக்ரம், மானாம் பள்ளி வனச்சரக அலுவலர் அறிவொளி, ஆகியோர் வந்த னர். அப்போது தொழிலாளர் கள் அவர்களை முற்றுகை யிட்டு தங்களது கோரிக்கை களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவோ அல்லது ஒரு குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வீதம் கொடுத்து தங்களை பணியில் இருந்து விடுவிக்கவோ வேண்டும் என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் அறி வொளி, சின்னக்கல்லார் பகுதியில் குடியிருந்து வரும் தொழிலாளர்களின் வீடுகள் அருகருகே இல்லை. இதனால் காட்டு யானைகள் எளிதாக குடியிருப்புக்குள் புகுந்து விடுகின்றன. எனவே பி.ஏ.பி. நிர்வாகத்திற்கு சொந்தமான பல குடியிருப்புகள் காலியாக உள்ளன. இந்த வீடுகளுக்கு எஸ்டேட் தொழிலாளர்களை மாற்றி விட்டால் காட்டு யானைகளின் தொல்லை அதிகம் இருக்காது என்று டிவிசனல் மேலாளரிடம் தெரிவித்தார்.
அப்போது அங்கு வந்த வால்பாறை தாசில்தார் நேரு விடமும், எஸ்டேட் தொழி லாளர்கள் இதே கோரிக்கையை முன்வைத்து வனத்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். இது குறித்து மாவட்ட கலெக்ட ரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் நேரு எஸ்டேட் தொழிலாளர்களி டம் உறுதி கூறினார்.
இதைத்தொடர்ந்து தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினர். தொழிலாளர் களின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
0 comments:
Post a Comment