Wednesday, September 24, 2014

மதுரை மாவட்டம் பரசுராம்பட்டியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மகன் சிவரஞ்சன் (வயது28). ஐ.டி.ஐ. படித்துள்ளார். தற்போது ரியல் எஸ்டேட் மற்றும் நிலம் வாங்கி விற்பனை உள்ளிட்ட தொழில்களை செய்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு புதூர் ஆத்திக்குளம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், இவருக்கும் காதல் ஏற்பட்டது. இது தொடர்பாக பெண் வீட்டாருடன் முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் காஞ்சரம்பேட்டை அருகில் உள்ள சின்னப்பட்டி–வெளிச்ச நத்தம் ரோட்டில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் சிவரஞ்சன் பலத்த வெட்டுக் காயங்களுடன் பிணமாக நேற்று கிடந்துள்ளார். அவரை யாரோ ‘மர்ம’ மனிதர்கள் வெட்டி படுகொலை செய்து உடலை வீசி சென்று உள்ளனர்.
இதுதொடர்பாக சிவரஞ்சனின் தாய் சரஸ்வதி போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். காதல் தகராறில் தனது மகன் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொலை தொடர்பாக ஆத்திக்குளத்தைச் சேர்ந்த தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயராஜ், அவரது சகோதரி மகன் ஜீவா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிவரஞ்சனிடம் செல்போன் மூலம் ஜீவா பேசி உள்ளார். அப்போது காதல் விவகாரம் தொடர்பாக சமரசம் செய்ய வரும்படி கூறினாராம். அதன் பிறகு சிவரஞ்சனை அழைத்து சென்ற ஜீவா மற்றும் சிலர் அவருக்கு மது கொடுத்து மயக்கி உள்ளனர்.
பின்னர் அவரை வெட்டி கொலை செய்து தென்னந்தோப்பில் வீசி உள்ளனர். இந்த கொலையில் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயராஜ் நேரடியாக ஈடுபட்டுள்ளாரா? அல்லது கூலிப்படை வைத்து கொலை நடந்ததா? என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment