Wednesday, September 03, 2014
திருப்பூர், : திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் துணை முதல்வராகவும், துறை தலைவராகவும் பணிபுரியும் பேராசிரியர் ஒருவர் மாணவிகளின் ஆபாச வீடியோ தன்னிடம் இருப்பதாக கூறி மிரட்டியதாக அக்கல்லூரி மாணவ, மாணவியர் நேற்று முன்தினம் கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லுரியில் துணை முதல்வராகவும், வணிகவியல் துறை தலைவராகவும் இருப்பவர் கல்லூரியின் உடை மாற்றும் அறையில் எடுத்த மாணவிகள் சிலரின் ஆபாச வீடியோ தன்னிடம் இருப்பதாக கூறி மிரட்டியதாக, நேற்று முன்தினம் மாணவ, மாணவியர் ஏராளமானோர் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கல்லூரி முன்பு அமர்ந்து மூன்று மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரி மற்றும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்து கல்லூரிக்கு வந்த காங்கயம் டி.எஸ்.பி., சுருளிராஜா, ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் செல்வதங்கம், எஸ்.ஐ., வருணியா மற்றும் கல்லூரி முதல்வர் சுப்ரமணியம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சம்பந்தப்பட்ட வணிகவியல் துறை தலைவரை மாற்றுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும், ஆபாச வீடியோ விவகாரம் குறித்து விசாரித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, மாணவ, மாணவியர்கள் தர்ணா போராட்டத்தை கைவி ட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர், கல்லூரி முதல்வர் சுப்ரமணி இதுகுறித்து கூறுகையில், வணிகவியல் துறை தலைவர் மீது கூறப்பட்டுள்ள இந்த புகார் உண்மையல்ல, அவர் மிகவும் கண்டிப்பாக நடத்து கொள் வதால் சிலர், அவர் மீது தவறான புகாரை தெரிவித்துள்ளனர் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...

0 comments:
Post a Comment