Wednesday, September 03, 2014
திருப்பூர், : திருப்பூர் காலேஜ்ரோடு சாதிக்பாஷா நகர் பிரிவில் ஏற்படும் விபத்துகளை தடுக்க அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கூறி அப்பகுதி மக்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் காலேஜ் ரோடு சாதிக்பாஷா நகர் பிரிவில் நேற்று மாலை ராயபுரத்தை சேர்ந்த மணி (27) என்பவரும், சாதிக்பாஷா நகரை சேர்ந்த மனிஷ் (21) என்பவரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அவர்களுக்கு எதிரே வந்த சரக்கு வேன் ஒன்று அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், படுகாயம் அடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாதிக்பாஷா நகர் பிரிவில் அதிக விபத்துநடப்பதாகவும், கல்லூரி, பள்ளிகள் உள்ள இந்த ரோட்டில் மினி பஸ்கள், லாரிகள், வேன்என அனைத்தும் வாகனங்களும் அதிவேகமாக செல்வதால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், இதற்கு உடனடியாக தீர்வு காண இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் வடக்கு போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இப்பகுதியில் வேகத்தடை அமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...

0 comments:
Post a Comment