Wednesday, September 03, 2014
திருப்பூர், : திருப்பூர் காலேஜ்ரோடு சாதிக்பாஷா நகர் பிரிவில் ஏற்படும் விபத்துகளை தடுக்க அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கூறி அப்பகுதி மக்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் காலேஜ் ரோடு சாதிக்பாஷா நகர் பிரிவில் நேற்று மாலை ராயபுரத்தை சேர்ந்த மணி (27) என்பவரும், சாதிக்பாஷா நகரை சேர்ந்த மனிஷ் (21) என்பவரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அவர்களுக்கு எதிரே வந்த சரக்கு வேன் ஒன்று அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், படுகாயம் அடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாதிக்பாஷா நகர் பிரிவில் அதிக விபத்துநடப்பதாகவும், கல்லூரி, பள்ளிகள் உள்ள இந்த ரோட்டில் மினி பஸ்கள், லாரிகள், வேன்என அனைத்தும் வாகனங்களும் அதிவேகமாக செல்வதால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், இதற்கு உடனடியாக தீர்வு காண இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் வடக்கு போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இப்பகுதியில் வேகத்தடை அமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...

0 comments:
Post a Comment