Wednesday, September 03, 2014
இந்தியாவில் உட்கட்டமைப்பு பணிகளுக்காக சுமார் ரூ 2 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய ஜப்பான் ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐந்து நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேவை இன்று தலைநகர் டோக்கியோவில் சந்தித்துப் பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் பலனாக, இரு நாட்டு அதிகாரிகளும் கலந்துகொண்ட கூட்டத்தில், இந்தியாவில் நவீன நகரங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புப் பணிகளுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் 3.5 டிரில்லியன் டாலரை, அதாவது இந்திய மதிப்பில் ரூ 2.01,480 கோடி முதலீடு செய்ய ஜப்பான் ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த முதலீடு பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்ததாக இருக்கும்.
இந்தியாவில் அதிவேக ஷின்கான்சென் ரயில் முறையை அறிமுகம் செய்ய நிதி, தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டு ஆதரவு அளிக்கப்படும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.
ஜப்பான் மற்றும் இந்தியாவில் படிப்புக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கையை இருநாடுகளும், கணிசமாக உயர்த்த உள்ளது. இந்தியாவில் ஜப்பான் மொழி கல்வி மேம்படுத்தப்படும். உலக அளவில் பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடங்களை அழிக்க இந்திய-ஜப்பான் உறுதி ஏற்றுள்ளது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...

0 comments:
Post a Comment