Wednesday, September 03, 2014
இந்தியாவில் உட்கட்டமைப்பு பணிகளுக்காக சுமார் ரூ 2 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய ஜப்பான் ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐந்து நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேவை இன்று தலைநகர் டோக்கியோவில் சந்தித்துப் பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் பலனாக, இரு நாட்டு அதிகாரிகளும் கலந்துகொண்ட கூட்டத்தில், இந்தியாவில் நவீன நகரங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புப் பணிகளுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் 3.5 டிரில்லியன் டாலரை, அதாவது இந்திய மதிப்பில் ரூ 2.01,480 கோடி முதலீடு செய்ய ஜப்பான் ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த முதலீடு பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்ததாக இருக்கும்.
இந்தியாவில் அதிவேக ஷின்கான்சென் ரயில் முறையை அறிமுகம் செய்ய நிதி, தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டு ஆதரவு அளிக்கப்படும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.
ஜப்பான் மற்றும் இந்தியாவில் படிப்புக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கையை இருநாடுகளும், கணிசமாக உயர்த்த உள்ளது. இந்தியாவில் ஜப்பான் மொழி கல்வி மேம்படுத்தப்படும். உலக அளவில் பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடங்களை அழிக்க இந்திய-ஜப்பான் உறுதி ஏற்றுள்ளது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment