Thursday, September 04, 2014
திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வியாழக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
மாநகராட்சி வார்டுகள்
திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.வேலுச்சாமி, மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் புடைசூழ யுனிவர்சல் தியேட்டர் சாலையில் இருந்து ஊர்வலமாகச் சென்று மாநகராட்சி அலுவலகத்தை அடைந்தார். அங்கு 22வது வார்டுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் பாஸ்கரிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவருடன் மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் என்.கோபாலகிருஷ்ணன், மாநகரக்குழு உறுப்பினர் ஈ.பி.ஜெயகிருஷ்ணன், தேர்தல் பணிக்குழு தலைவர் ராஜூ என்கிற சென்னியப்பன், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் என்.சண்முகம், சி.மாரப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதேபோல் 45வது வார்டில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி.என்.நாகராஜன் அந்த வார்டு தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தமிழ்ச்செல்வனிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு வட்டாரக்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, மாணிக்கம், இளைஞர் பெருமன்ற வட்டார தலைவர் கனகராஜ், மார்க்சிஸ்ட் கட்சி நகரக்குழு உறுப்பினர் யு.நாசர், கிளைச் செயலாளர் பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நகராட்சி வார்டு
பல்லடம் நகராட்சி 6வது வார்டுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் எஸ்.சாந்தாமணி வியாழக்கிழமை நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ப.கு.சத்தியமூர்த்தி, கமிட்டி உறுப்பினர்கள் பரமசிவம், ஆஸாத், கணேசன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கந்தசாமி, சுப்பிரமணியம் உள்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
பேரூராட்சி தலைவர் பதவி
மடத்துக்குளம் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் எம்.எம்.வீரப்பன் வியா ழக்கிழமை காலை 11.30 மணி அளவில் பேரூராட்சிஅலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.அப்போது அவருடன் தாலுகா செயலாளர் வெ.ரங்கநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் என்.சசிகலா, வாலிபர் சங்க நிர்வாகி வடிவேல், பன்னீர்செல் வம்,ராஜரத்தினம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியின்போது கலந்து கொண்டனர்.
திருமுருகன்பூண்டி பேரூராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜி.ராமசாமி பூண்டி பேரூராட்சிமன்றத் தேர்தல் அலுவலர் நந்தகோபாலிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன், மார்க்சிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றியச் செயலாளர் பி.முத்துசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் தேவராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
ஒன்றிய கவுன்சிலர்கள்
உடுமலை ஊராட்சி ஒன்றிய 6வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஏ.பழனிச்சாமி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியம், ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.பஞ்சலிங்கம் மற்றும் முத்துசாமி, கிருஷ்ணசாமி உள்பட செல்லப்பம்பாளையம் கிளை ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அவிநாசி ஊராட்சி ஒன்றியம் 16வது வார்டுக்கு சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஆர்.செந்தில்பிரபு அவிநாசி ஊராட்சி ஒன்றிய ஆணையர் து.இராஜகோபாலனிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பி.முத்துசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மோகன், புதுப்பாளையம் ஊராட்சிமன்றத் தலைவர் முருகன், சுப்பிரமணியம் ஆகியோர் உடனிருந்தனர்.
பேரூராட்சி கவுன்சிலர்
தளி பேரூராட்சி 5வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் எஸ்.குமரேசபாண்டியன், பேரூராட்சி அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவருடன் மார்க்சிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜகோபால், சாந்திபிரியா, ஜெகதீசன், கிளைச் செயலாளர் கருப்பசாமி, 14வது வார்டு உறுப்பினர் மகாலட்சுமி, பொன்னாலம்மன் கோயில் ஆனந்தன் மற்றும் திருமூர்த்தி மலை கிளை ஊழியர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
ஊராட்சித் தலைவர் பதவி
உடுமலை ஒன்றியம் கண்ணமநாயக்கனூர் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.செல்வராஜ் வியாழனன்று உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியம், மாவட்டக்குழு உறுப்பினர் என்.கிருஷ்ணசாமி, ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ், நகரச் செயலாளர் தண்டபாணி, கமிட்டி உறுப்பினர்கள் செல்வராஜ், முத்துசாமி, விஸ்வநாதன், சுதா சுப்பிரமணியம், வசந்தி, வசந்தாமணி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சித்ரா ரணதேவ், முத்துக்குமார் உள்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...


0 comments:
Post a Comment