Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
சென்னை, : கொரட்டூர் போலீசார் நேற்று பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். 
தீவிர விசாரணையில், மதுரை, முத்துராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த கவாஸ்கர் (28) என்பதும், அவர் மீது சென்னை, புறநகர் மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது.
மேலும், நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை, நேதாஜி நகரை சேர்ந்த சீனிமுகமது, (42) என்பவரிடம் கத்திமுனையில் பணத்தை பறித்து சென்றதும் தெரிந்தது. அவர் கொடுத்த தகவலின்பேரில் 15 சவரன் நகையை பறிமுதல் செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.

0 comments: