Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
தண்டையார்பேட்டை, : கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ஜான்சன் (52). திருவொற்றியூர் காவல் நிலைய குற்றப்பிரிவு சப்இன்ஸ்பெக்டர். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் வெளியூர் சென்றிருந்தனர். 
நேற்று முன்தினம் வீட்டில் புகுந்த ஒரு ஆசாமி, திடீரென ஜான்சனின் முகத்தில் சரமாரியாக தாக்கினான். இதில் அவரது பல பற்கள் ஆடின. உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. அலறல் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த போலீசார் ஓடிவந்தனர். அதற்குள் ஆசாமி தப்பிவிட்டான். ஸ்டான்லி மருத்துவமனையில் ஜான்சன் அனுமதிக்கப்பட்டார். 
இதுகுறித்து ஏழுகிணறு போலீசார் விசாரிக்கின்றனர்.

0 comments: